பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் மற்றும் இந்த கொடூர யுத்தவெறிக்குத் துணைபோகும் அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கண்டித்தும், மனிதாபிமானமற்ற தாக்குதலை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் கேரள மாநிலம் காசர்கோடில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.