world

img

இஸ்ரேலில் சிக்கி தவித்த 212 இந்தியர்கள் இன்று தில்லி வருகை!

இஸ்ரேலிலிருந்து 212 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று காலை தில்லி வந்தனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. எல்லைப் பகுதியான காசா நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. 

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும், பலர் தங்களது குடும்பம், வீடு, உடைமைகளை இழந்துள்ளனர். இவர்களுக்காக தற்காலிக முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, இந்தியர்கள் பலர் இந்த போரில் சிக்கித் தவிப்பதாக வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேலுக்கான இந்திய தூதரகத்தின் உதவி உடன் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை உருவாக்கினர்.

இத்திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கி இருக்கும் இந்தியர்கள்  

இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து  212 இந்தியர்கள் மட்டும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் இன்று காலை தில்லி விமான நிலையத்தில் வந்து தரையிறங்கினர். 

212 இந்தியர்களில் 21 தமிழர்கள் தமிழாட்டிற்கு வந்தனர். 14 பேர் சென்னைக்கும், 7 பேர் நேரடியாக கோவை சென்றனர்.

18,000 இந்தியர்கள் இன்னும் இஸ்ரேலில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.