நடப்பாண்டில் மேலும் ஏராள மான இலங்கை மக்கள் வறு மையின் பிடியில் சிக்கு வார்கள் என்று உலக வங்கி எச்சரித்துள் ளது. உடனடியாக கொள்கை நட வடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்றும் இலங்கை அரசுக்கு அறி வுறுத்தியிருக்கிறது. நாடு விடுதலைபெற்ற 1948 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையில் காணாத ஒரு பொருளாதார நெருக்கடி யில் இலங்கை சிக்கியிருக்கிறது. அந்நியச் செலாவணி இருப்பு இல்லா மல் போனதுதான் இந்த நெருக்கடிக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இத னால் அத்தியாவசியத் தேவைகளான உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட் களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை திணறுகிறது. தென் ஆசியப் பகுதி பற்றிய தனது குறிப்பில், “கிட்டத்தட்ட 11.7 விழுக்காடு மக்கள் ஒரு நாளைக்கு 3.20 அமெரிக்க டால ரில் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். நடுத்தர நாடு களுக்கான சர்வதேச வறுமைக்கோடு என்பது ஒரு நாளைக்கு 3.20 அமெரிக்க டாலர் என்று கணக்கிடப்படுகிறது. இந்த மதிப்பீடு படி தான் சர்வதேச அளவில் வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 9.2 விழுக்காடு அதிகரித்திருக்கிறது”என்று உலக வங்கி கூறியுள்ளது.
இலங்கையில் வறுமைக்கோடு அதிகரித்ததற்கு மேலும் பல கார ணங்கள் உள்ளன. வறுமையில் வாடு பவர்களுக்கு உணவளிக்க இலங்கை அரசு உருவாக்கிய சம்ருதி திட்டம் போதுமானதாக இல்லை. இது பற்றிக் கருத்து தெரிவித்த உலகவங்கி, “இந்தத் திட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களில் பாதிப்பேர் கூட பயன் பெறவில்லை. இந்தத் திட்டத்தில் தரப்பட்ட நிதியும் போதுமானதாக இல்லை” என்று சுட்டிக்காட்டுகிறது. அதோடு, பெருந்தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம் மேலும் 3.6 விழுக்காடு சரிவைக் கண்டது. “நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டதால் இலங்கையின் பொருளா தாரம் நிலையற்ற தன்மையில் தள்ளாடுகிறது” என்று உலக வங்கி சொல்கிறது. உடனடி நடவடிக்கைகளில் நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்யுங்கள் என்று உலக வங்கி கறாராகச் சொல்கிறது. அது வளர்ச்சி மற்றும் வறு மையைப் பாதித்தாலும், அசமத்துவ சூழலைச் சரி செய்ய முயற்சிக்கும் என்று உலக வங்கி அறிவுறுத்துகிறது. கடந்த வாரத்தில், 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை மருந்துகள் மற்றும் பிற அத்தி யாவசியப் பொருட்களை வாங்குவ தற்காக உலக வங்கி இலங்கைக்குத் தந்துள்ளது. தற்போதுள்ள பொருளா தார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள வேண்டுமானால், 4 பில்லியன் அமெ ரிக்க டாலர்கள் வரையில் தேவைப்படு கிறது. உலக வங்கி, சீனா மற்றும் ஜப்பானி டம் பேச்சுவார்த்தைகள் நடந்து வரு கின்றன. மேலும் சர்வதேச நிதியத்தி டம்(ஐ.எம்.எப்) பேச்சுவார்த்தை நடத்த இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி சென்று வந்துள்ளார். எரிபொருளை இறக்குமதி செய்ய 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக கொடுத்து உதவுவதாக இந்தியா கூறியுள்ளது. அதோடு ஏற்கனவே தர வேண்டிய சில தொகை களை பின்னர் வாங்கிக் கொள்ள இந்தியா சம்மதம் தெரிவித்திருக்கிறது. ஆயிரக் கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று வரு கிறார்கள். பொருளாதாரத்தை நாச மாக்கியதற்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பொறுப்பேற்க வேண்டும், பொறுப்பிலிருந்து விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.
திவால் ஆனதாக அறிவிப்பு
இதற்கிடையில் சர்வதேசக் கடன் களை திருப்பிச் செலுத்துவதை நிறுத்து வதாக ஏப்ரல் 12 ஆம் தேதி இலங்கை அரசு அறிவித்தது. இலங்கையின் சர்வதேசக் கடனின் மதிப்பு 51 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இலங்கையின் டெய்லி பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் தலைப்புச் செய்தி “இலங்கை திவாலானதாக அறிவித்தது” என்றிருந்தது. இலங்கை ஏர்லைன்ஸ் ஒரு விளம்பரத்தை வெளி யிட்டிருந்தது. தனது 40 விமானங்களை குத்தகைக்கு விடும் விளம்பரமாக அது இருந்தது. அதைப் பார்த்து கோபத்துடன் ஹர்ஷா டி சில்வா என்ற நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கை திவாலாகி விட்டது. இதற்கு யாரிடம் பணம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த மாதிரியான மக்கள் திரளை நான் இதுவரையில் பார்த்ததில்லை என் கிறார் பத்திரிகையாளர் ரோயல் ரேமண்ட். மக்களும் தங்கள் பிரச்சனை களை சமூக வலைத்தளங்களில் கொட்டு கிறார்கள். நான் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்தேன். அவ்வ ளவு நேரத்திற்குப் பிறகுதான் பெட்ரோல் இல்லை என்று சொன்னார்கள் என்கிறார் ஒருவர். மற்றொருவர், “நன்றி கோத்த பய.. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். வீட்டுக்குச் செல்லுங்கள்” என்று கிண்டலடிக்கிறார். அண்மைக்காலம் வரையில் ஆளும்கட்சியோடு உறவாடி வந்த எதிர்க்கட்சிகளையும் மக்கள் நம்புவ தாக இல்லை. இடதுசாரிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா, மக்க ளைத் திரட்டிப் போராட முடிவு செய் திருக்கிறது. மக்கள் போராட்டங்களில் எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் பங்கேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி ஆதாரம் - பிரண்ட் லைன் மற்றும் நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்