ராஜபக்சே ஆதரவாளர்களை தேடித் தேடி தாக்கிய மக்கள் கலவரம் தூண்டிய மகிந்தா ஓட்டம் பிடித்தார் ஜனாதிபதி கோத்தபயவும் தப்பிக்க முடியாது
கொழும்பு, மே 10 - இலங்கையில் அமைதி வழியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது வன்முறை கும்பலை ஏவிவிட்ட முன்னாள் பிரதமர் மகிந்த ராஜ பக்சேவை உடனே கைது செய்ய வேண்டும் என்று அந்நாட்டில் கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்த பய ராஜபக்சே-வும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பியுள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இலங்கை மக்கள் போராடி வருகின்றனர். கோத்தபய ராஜபக்சே தலைமை யிலான இலங்கை அரசு மக்களின் போராட்டத்தை ஒடுக்க, அடுத்த டுத்து அவசர நிலைகளை அமல் படுத்திப் பார்த்தது. எனினும் மக்களின் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தலைநகர் கொழும்புவில், நாடா ளுமன்றம் செல்லும் சாலையில், ஜனாதிபதி கோத்தபய ராஜ பக்சே-வின் மாளிகை எதிரே அமைந்திருக்கும் காலிமுகத் திட லில் இளைஞர்கள், மாணவர்கள், ஆண்கள், பெண்கள் என பல ஆயிரக் கணக்கானோர், கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் கடந்த 33 நாட் களாக தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒரே குரலில், இலங்கை அரசு நிர்வாகத்தில் தோல்வி அடை ந்துள்ள ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளி யேற வேண்டும் என்று முழங்கி வந்தனர். இந்நிலையில், திங்களன்று காலை கொழும்பு காலிமுகத் திட லில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை அச்சுறுத்தி, அங்கிருந்து விரட்டியடிக்கும் வகை யில், பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். காலிமுகத் திடலில் மக்கள் தங்கியிருந்த கூடாரங்களை தீ வைத்து எரித்தனர். அப்போது பொதுமக்களும் பதில் தாக்குதல் நடத்தியதால், காலிமுகத் திடல் வன்முறைக் களமானது. சமகி ஜன பலவேகயவின் தலை வரும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச போராட்ட பகுதிக்கு வந்த நிலை யில், அவர் மீது மகிந்த ராஜபக்சே வின் ஆதரவாளர்கள் கட்டைகளை யும் தண்ணீர் பாட்டில்களையும் வீசித் தாக்குதல் நடத்தினர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டு களை வீசி, தடியடி நடத்தினர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராணுவ வீரர்களும், திடலில் இருந்த போராட்டக்காரர்களை வலுக் கட்டாயமாக வெளியேற்றினர். ராணுவ தளபதி சவேந்திர சில்வா நேரடியாக களத்துக்குச் சென்று உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த வன்முறையில் 150-க்கும் மேற் பட்டோர் பலத்த காயமடைந்தனர். இது ஏற்கெனவே கொதித்துப் போயிருந்த மக்களை மேலும், ஆத்திரமடையச் செய்தது. அவர்கள் கொழும்பு நகரம் முழுவதும் ராஜ பக்சே ஆதரவாளர்களை வீடு, வீடாகத் தேடிச் சென்று தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். ராஜபக்சே ஆதரவாளர்களின் வீடுகள், வாக னங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த பொலன்நறுவை தொகுதி எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரள, கம்பகா மாவட்டம் நிட்டம்பு போராட்டக் களத்திற்குச் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டி யதாகவும், நான்கு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது, அவரை யும் அவரது வாகனத்தையும் பொது மக்கள் சுற்றி வளைத்து தாக்கியுள்ள னர். இந்த தாக்குதலில் எம்.பி.யும் அவரது கார் ஓட்டுநரும் கொல்லப் பட்டனர்.
அமரகீர்த்தி அத்துகோரள தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார், அவரது ஓட்டுநர் அவராகவே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டார் என்றும், மற்றொரு புறத்தில் இவர்களை பொதுமக்கள்தான் அடித்துக் கொன்றதாகவும் இருவேறு தக வல்கள் வெளியாகியுள்ளன. இத னிடையே நிட்டம்பு-வில் வன்முறை யைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயம் அடைந்தனர். மகிந்த ராஜபக்சே-வையும் அவரது ஆதரவாளர்களையும் குறி வைத்து பொதுமக்களின் போராட்டம், வன்முறை தீவிர மானதைத் தொடர்ந்து, ஏற்கெனவே ராஜினாமா யோசனையிலிருந்த பிர தமர் மகிந்த ராஜபக்சே, திங்களன்று மாலை தனது ராஜினாமா கடி தத்தை, ஜனாதிபதியும் தனது இளைய சகோதரருமான கோத்த பய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்தார். நிதித்துறை, வேளாண்மை, விளையாட்டு துறை அமைச்சர் களாக இருந்த, ராஜபக்சேவின் ஏனைய குடும்ப உறுப்பினர்களும், அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். “நாட்டை சீர்குலைக்க விரும்ப வில்லை. எதிர்க்கட்சிகள் தங்களது சுயலாபத்துக்காக கலவரத்தை தூண்டி வருகின்றன. என்னை பொறுத்தவரை தாய் நாட்டுக்கே முத லிடம் அளிக்கிறேன். பொதுமக்க ளின் நலனுக்காக எந்த தியாகத்தை யும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று மகிந்த ராஜபக்சே உருக்க மாக பேசியதை மக்கள் நம்புவதாக இல்லை.
ராஜபக்சே அவரது பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங் களில் அவரின் பூர்வீக இல்லமான, அம்பாந்தோட்டையில் உள்ள மெத முலனா இல்லத்தை பொதுமக்கள் தீயிட்டுக் கொளுத்தினர். இதேபோல் ராஜபக்சே அருங்காட்சியகமும் தீவைக்கப்பட்டது. புத்தளம் மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த வின் வீடு, ஸ்ரீலங்கா பொதுஜன பெர முனாவின் நாடாளுமன்ற உறுப்பி னர் ஜோன்ஸ்டன் பெர்னான் டோவின் வீடு, மொறட்டுவை மேயர் சமல்லால் பெர்ணான்டோவின் வீடு, அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் வீடு, குருநாகல் மேயர் துஷார சஞ்ஜீவவின் வீடு, வடமத்திய மாகாண முதல்வர் மஹிபால ஹேரத், அவரது மகன் அமைச்சர் கனக ஹேரத், ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் பந்துல குணவர்தன, சன்ன ஜயசுமன, கோகிலா குண வர்தன, பவித்ரா வன்னியாராச்சி, திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பியின் வர்த்தக நிலையம் ஆகியவை தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகைக்குள் நுழைய முயன்ற ஒரு குழுவினர் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய தாக கூறப்படும் நிலையில், ராஜ பக்சே பெற்றோரின் கல்லறை, கோத்தபாய ராஜபக்சேவின் ஜோதி டர் ஞான அக்கா வீடு ஆகியவற்றை யும் போராட்டக்காரர்கள் விட்டு வைக்கவில்லை. பல்வேறு இடங்களில் ராஜபக்சே ஆதர வாளர்கள் ஆடை களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டனர். திங்களன்று மாலை துவங்கிய வன்முறை செவ்வாய்க்கிழமை காலை ஏழு மணி வரை நீடித்த நிலை யில், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வன்முறைகளில் 217 பேர் வரை காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளனர். மக்களின் தாக்குதலுக்கு பயந்து ஆளும் கட்சி மற்றும் அரசின் உயர்மட்ட தலைவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று பதுங்க ஆரம்பித்துள்ளனர்.
ராஜபக்சே குடும்பத்துடன் வெளிநாடு தப்பி ஓட்டம்?
இலங்கை மக்கள் தங்களுக்கு எதிராக கொதித்தெழுந்துள்ள நிலையில், அவர்களின் எதிர்ப்புக்குப் பயந்து, மகிந்த ராஜபக்சேவின் 2-வது மகன் யோஷித ராஜபக்சே தமது மனைவி யுடன் கொழும்பில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு தப்பி சென்றுள்ளார். மகிந்த ராஜபக்சே-வும் பிரதமருக்கான சொகுசு மாளிகையான அலரி மாளிகையை விட்டு குடும்பத்துடன் வெளியேறி, ஹெலிகாப்டர் மூலம் திரிகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்படு கிறது. ஆனால், கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம், ரத்மலானை விமான நிலையங்களை போராடும் பொதுமக்கள் சுற்றி வளைத்துள்ளனர். “வன்முறைச் செயல்களை வன்மை யாகக் கண்டிக்கிறேன். வன்முறை தற்போ தைய பிரச்சனைகளைத் தீர்க்காது. அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஜனாதிபதி கோத்தபய ராஜ பக்சே விடுத்த வேண்டுகோளை போராடும் மக்கள் நிராகரித்துள்ளனர். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவும் ராஜினாமா செய்ய வேண்டும், ராஜபக்சே குடும்பம் ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்து விலக வேண்டும்; 8 பேரின் உயிர் பறிபோவதற்கு காரண மான மகிந்த ராஜபக்சே கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை மக்கள் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
ராஜபக்சேவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மற்றும் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கட்சித் தலைவர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். “திங்களன்று நடைபெற்ற அனைத்துமே திட்ட மிடப்பட்ட ஒரு நாடகம்தான். இந்த சம்பவங் களுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். “தாக்குதல் நடத்தியவர்களை கொழும்புக்கு அழைத்து வந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும்” என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் தமது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தி உள்ளார். “நாட்டை கலவர பூமியாக்கி இருக்கும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வலியுறுத்தி உள்ளார்.
அமைதியான முறையில் நடைபெற்றுவந்த போராட்டத்தின் மீது அரசு ஆதரவுடன் நடத்தப் படும் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் செவ்வாய்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. இதனிடையே, போராட்டத்தை ஒடுக்க முனைந்துள்ள இலங்கை அரசு எந்தப் பிடியாணை யும் இன்றி போராடுபவர்களை கைது செய்வதற் கான அதிகாரத்தை ராணுவத்திற்கும் காவல் துறைக்கும் வழங்கியுள்ளது. இலங்கையின் அட்டர்னி ஜெனரல் நடை பெற்றுள்ள வன்முறை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் காவல்துறை தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டத்துறை செயலாளர் சஞ்சய் ராஜரத்தினம், மக்களின் அரசியலமைப்பு உரிமைகளில் சட்ட விரோதமாக தலையிடும் சம்பவங்கள், அதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து முழு அளவிலான விசாரணை நடத்துமாறு காவல்துறை தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.