world

img

இலங்கையில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தினால் கண்டதும் சுட உத்தரவு

இலங்கையில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினால் கண்டதும் சுட இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, பொதுமக்கள் உணவின்றி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர். மேலும், இலங்கை ஜனாதிபதியும், பிரதமரும் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, போராட்டக்காரர்கள் மீது மகிந்த ராஜபக்சேவின் ஆதாரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கடந்த 2 நாட்களாக இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இலங்கையில் பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகள், மகிந்த ராஜபக்சேவின் வீடு உள்பட பலரின் வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டது.

இந்நிலையில், இலங்கையில் பொதுச்சொத்துக்களை சூறையாடுபவர்கள், தனிப்பட்ட தீங்கிழைக்கும் அனைவரையும் சுட்டுதள்ள முப்படையினருக்கும் அனுமதியளித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.