இலங்கையில் மூன்று சர்வதேச பல் கலைக்கழகங்கள் அமைக்கப்படுவ தாக அந்நாட்டின் உயர் கல்வி அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இரண்டு பல்கலைக்கழகங்களின் கட்டுமானம் துவங்கி விட்டது என்றும் மூன்றாவது பல்கலைக்கழக பணிகள் 2024 மே மாதத்திற்குள் துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பல்கலைக் கழகங்கள் இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.