இலங்கை, ஏப்.3- இலங்கை ஜனாதிபதி கோதபய ராஜபக்சேவின் நிர்வாகத்தைக் கண் டித்து போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அனைத்து முக்கிய சமூக ஊடக தளங்களையும் செய்தியிடல் தளங்க ளையும் இலங்கை முடக்கியுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, பாது காப்பு அமைச்சர் விடுத்த கோரிக்கை யின் அடிப்படையில் இந்த முடிவு எடுக் கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித் துள்ளது. இந்த நடவடிக்கை முகநூல், யூ-டியூப், மெசஞ்சர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், ட்விட்டர், டிக்டாக் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மக்கள் குழுக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து கோதபய அரசு சனிக் கிழமை இலங்கையில் அவசர நிலை யைப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஊரடங்கை மீறியதாக 660 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள னர்.
மூத்த வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள போராட்டங்களை தொடர்ந்து அரசு கடும் நடவடிக்கையை எடுப்பதாக குற் றம் சாட்டியுள்ளனர். சமூக ஊடகங்ளுக்கு தடை விதித்தி ருப்பது அரசாங்கத்தின் சமீபத்திய நட வடிக்கையாகும், இது அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியின் பிரதி பலிப்பாகும். எரிபொருள், உணவு, பால் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களுக்கு மக்கள் போரா டுகின்றனர். எரிபொருள் பற்றாக்குறை யால் கடந்த வாரம் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இந்த நிலையில் ‘கோதா கோ ஹோம்’ (Gota Go Home)என்ற முகநூல் பக்கத்தை நடத்தியதாக விமர்சகர் அனு ருத்த பண்டாரவை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீ னில் விடுவிக்கப்பட்டார். அதிகரித்து வரும் பொது விமர்ச னங்களை அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது. சமூக ஊடகங்களுக்கான தடை என்பது வெளிப்படையாக கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகும். இது குறிப்பாக சமூக ஊடகங்களை பெரிதும் நம்பியிருக்கும் சிறிய செய்தி இணையதளங்களைப் பாதிக்கிறது என்று மூத்த பத்திரிகை யாளரும் உள்ளூர் செய்தி இணைய தளத்தின் ஆசிரியருமான ஈஸ்வரன் ரத்னம் கூறினார். இணையதளங்கள் முடக்கப்பட்டுள் ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டிஜிட்டல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சே கூறியுள் ளார். நாமல் ராஜபக்சே ஜனாதிபதி கோத பய ராஜபக்சேவின் மருமகனாவார்.