இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி உருவாகி உள்ள நிலையில் 12.5 கிலோ சிலிண்டர் ரூ.5,175க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையில் அத்தியாவசியப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மேலும் இலங்கையில் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் கடல் வழியாக தமிழகத்திற்கு வரும் சூழல் உருவாகி உள்ளது.
ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்களின் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள நிலையில் வீடுகளில் சமையலுக்குப் பயன்படும் 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு உருளை விலை உயர்வு இன்று இரவு முதல் அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தற்போது 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயு உருளை விலை ரூ.2.675 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரூ.2,500 உயர்த்தப்பட்டு நாளை முதல் ரூ.5.175க்கு விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது 70 சதவீத மக்கள் எரிவாயு உருளையைப் பயன்படுத்தாமல் விறகு அடுப்புக்கு மாறிவிட்டதாகவும், அதனால் ஏற்பட்டிருக்கும் இழப்பை ஈடுகட்டும் வகையில் விலை உயர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.