இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு இந்தோனேசியாவின் முலுகு மாவட்ட பகுதியில் திகுர் கடல்பகுதியிலிருந்து 132 கி.மீ. தொலைவில், 183 கி.மீ. ஆழத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3-ஆகப் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 2 வீடுகள் இடிந்து விழுந்ததுடன் சில பாதிப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. இது மட்டும் இல்லாமல் அதே பகுதியில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதில் அதிகபட்சமாக 5.3 ரிக்டர் அளவுகோல் அளவில் நிலநடுக்கம் பதிவானது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.