world

img

இந்தோனேஷியாவில் பலத்த நிலநடுக்கம் : 56 பேர் பலி

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தில் சிக்கி 56 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம், இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தா வரையிலும் கூட உணரப்பட்டது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.