world

img

இந்தோனேசியாவில் பெய்த கனமழையால் 26 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் அண்மையில் பெய்த கனமழையினால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மேற்கு சுமத்ரா மாகாணத்தின் 9 மாவட்டங்களில் உள்ள 37,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் நீரில் மூழ்கின.
திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில்,  11 வீடுகள் நிலச்சரிவில் புதைந்துள்ளது. மேலும் 666 வீடுகள் சேதமடைந்தன.
279 ஏக்கர் பரப்பளவிலிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 2 பேர் காயமடைந்த நிலையில் 11 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மலைப் பிரதேசங்கள், நதியின் சமவெளியையொட்டி லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குக் கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவுகளும் திடீர் வெள்ளப்பெருக்கும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது