தீண்டாமைக்கு எதிராக சட்டம் நிறைவேறியது!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் தீண்டாமையை குற்றமாக கருதும் சட்ட மசோதாவிற்கு ஒப்பு தல் அளித்ததன் மூலம் சாதி பாகுபாட்டைத் தடை செய்யும் முதல் அமெரிக்க மாநிலமாக மாறியது. இதற்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
பாலியல் வல்லுறவு : தலைமையாசிரியர் கைது
ஆசிரியர்களை பாலியல் வல்லுறவு செய்து மிரட்டிய குற்றச் சாட்டில் பாகிஸ்தான் பள்ளி முதல்வர் இர்பான் என்பவ ரை கராச்சி போலீசார் கைது செய்துள்ளனர். கராச்சியின் குல்ஷன் -இ-ஹதீத் பகுதி பள்ளி தலைமை ஆசிரியரான இவர் 24க் கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ பதிவு செய்து மிரட்டியுள்ளார்.
சீனப் பெருஞ்சுவரைத் தோண்டி பாதை
சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியில் பாதை உருவாக்கிய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. பயண நேரத்தை குறைக்க சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியில் புல்டோசர் வைத்து குறுக்குவழியை தோண்டியதற்காக ஷாங்சி மாகாணத்தில் 38 வயது ஆண் மற்றும் 55 வயது பெண்ணை சீன அரசு கைது செய்துள்ளது.
சுறா தாக்குதலில் மூன்று பேர் மீட்பு
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையில் படகில் சென்றவர்கள் பவளப்பாறை பகுதியில் சிக்கிக் கொண்டபோது அவர்களின் படகு சுறாமீன்களால் தாக்குத லுக்கு உள்ளானது. பிறகு அம்மூன்று பேரும் மீட்கப்பட்டதாக ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘கோபத்தில் ஸ்டூடியோவிற்கு தீ வைத்தேன்’
2019 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் ஷின்ஜி அயோபா (40) என்பவர் ஸ்டூடியோவிற்கு தீ வைத்ததில் 36 நபர்கள் உயிரிழந்தனர். ‘எனது நாவலின் கதையை கியோட்டோ அனிமேஷன் ஸ்டிடூயோ திருடிவிட்ட கோபத்தில் அவ்வாறு செய்தேன், இத்தனை நபர்கள் உயிரிழப்பார்கள் என நான் நினைக்கவில்லை’ என குற்றத்தை ஒப்புக்கொண்டார்.