world

img

விடுதலை செய்க!

லண்டன், ஜூன் 23- விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஊடகவியலாளர்கள், ஊடக ஆசிரி யர்கள் மற்றும் பதிப்பாளர்கள் அடங்கிய சர்வதேசக் குழு கோரியுள்ளது ஆறு நாடுகளைச் சேர்ந்த 15 பிரதிநிதிகள் ஜெனீவாவில் கூடி இது குறித்து விவாதித்திருக்கிறார்கள். பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க அசாஞ்சே விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கோரினர். 140 நாடுகளில் உள்ள ஊடகவியலாளர்களில் 6 லட்சம் பேரை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள சர்வதேச பத்திரிகை யாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான டொமினிக் பிரடாலி, ‘‘தனது குடும்பத்தினருடன் மீண்டும் சேரும் வகையில் அசாஞ்சே விடுதலை செய்யப்பட வேண்டும். தனது இயல்பான வாழ்க்கையை அவர் வாழ்பவதற்கு அனுமதிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.

;