பெய்ஜிங், டிச.25- இருதரப்பு உறவுகளின் “நிலையான மற்றும் உறுதி யான வளர்ச்சிக்கு” இந்தியா வுடன் இணைந்து பணி யாற்ற சீனா தயாராக உள்ளது; 2020-ஆம் ஆண்டு முதல் பதற்றம் நிலவும் எல்லைப் பகுதிகளில் ஸ்திர த்தன்மையை நிலைநிறுத்து வதற்கு இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஞாயிறன்று தெரிவித்தார். ‘2022-ஆம் ஆண்டில் சர்வதேச நிலைமை மற்றும் சீனாவின் வெளிநாட்டு உற வுகள்’ குறித்த கருத்தரங்கில் ஞாயிறன்று உரையாற்றிய வாங் யி, “சீனாவும் இந்தியா வும் இராஜதந்திரம் மற்றும் இராணுவ வழிகள் மூலம் தொடர்பைப் பேணி பாது காத்து வருகின்றன. இரு நாடு களும் எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை நிலை நிறுத்த உறுதிபூண்டுள்ளன” என்றார். அதே நேரத்தில் அமெரி க்காவின் மிரட்டலுக்கு சீனா அஞ்சவில்லை என்று வாங் யி தெளிவுபடுத்தினார். கடந்த டிச.20 அன்று இந்தியா-சீனா கார்ப்ஸ் கமா ண்டர் நிலைக் கூட்டத்தின் 17-ஆவது சுற்றுப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது இந்தியா வும் சீனாவும் தங்களுக்கிடை யேயான நெருக்கத்தை அதி கப்படுத்தவும் பரஸ்பரம் இரு நாடுகளும் ஏற்றுக்கொள் ளக் கூடிய தீர்வை உருவா க்கவும் ஒப்புக்கொண்டனர்.