world

img

தார்மீகப் பொறுப்பு ஏற்கிறேன்

ஹோசிமின் சிட்டி, ஜன.19- தனக்குக் கீழ் பணியாற்றிய இரண்டு துணைப் பிரதமர்கள், சில அமைச்சர்கள் மற்றும் பல அதிகாரிகள் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்று வியட்நாம் ஜனாதிபதி குயென் சுவான் ஃபுக் பதவி விலகியுள்ளார்.  புரட்சிகரப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த ஃபுக், கட்சி மற்றும் ஆட்சியில் முக்கிய மான தலைவராவார். அடிப்படைப் பயிற்சி பெற்று, அடிமட்டத்தில் இருந்து மேலே வந்த  அவருக்கு கட்சியின் மத்தியக்குழு மற்றும் அர சியல் தலைமைக்குழு பல்வேறு முக்கியமான பொறுப்புகளை அளித்தன. 2016 முதல்  2021-ஆம் ஆண்டு வரையில் பிரதமராக இருந்தார். பதவி நிறைவுக் காலத்தில்தான் கொ ரோனா பெருந்தொற்று பாதிப்பு இருந்தது. அதற்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னி ன்று, தலைமை தாங்கி நடத்திச் சென்றார்.  

அதேவேளையில், அவருக்குக் கீழ் பணி யாற்றி இரண்டு துணைப் பிரதமர்கள், மூன்று அமைச்சர்கள் பல்வேறு தவறுகளைச் செய்ததற்கான அரசியல் பொறுப்பை அவர் ஏற்க வேண்டியிருக்கிறது. இந்தத் தவறுகள் பல்வேறு கடுமையான விளைவுகளை ஏற்படு த்தியுள்ளன. இரண்டு துணைப் பிரதமர் களும் தங்கள் பதவிகளில் இருந்து விலகி யிருக்கிறார்கள். இரண்டு அமைச்சர்கள் மற்றும் பல அரசு அதிகாரிகள் மீது குற்றப் பிரிவு விசாரணைகள் நடந்துள்ளன. கட்சிக்கும், மக்களுக்கும் முன்னால் தனக்கு இருக்கும் பொறுப்பை மிகச்சரியாக உணர்ந்து கொண்டுள்ள குயென் சுவான்  ஃபுக், தனது பொறுப்பிலிருந்து விடுவிக்கு மாறும், ஓய்வுபெற விரும்புவதாகவும் கட்சிக்குக் கடிதம் அளித்தார். கட்சியின் அர சியல் தலைமைக்குழு, மத்தியக்குழு, நாட்டின் ஜனாதிபதி மற்றும் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்து அவரை விடுவிக்க வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.