பெய்ஜிங், ஜன.17- கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக சீனாவின் மக்கள் தொகை குறைந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருக்கிறது. 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட சீனாவின் மக்கள் தொகை சரிவு பல்வேறு விளைவுகளை ஏற் படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். உழைக்கும் மக்களின் சராசரி வயதிலும் சரிவு ஏற்படுவதால் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறு கிறார்கள். மக்கள் நலக் கொள்கைகள் மீதும் அழுத்தம் உருவாகும் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.
2022 ஆம் ஆண்டின் நிறைவில் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியே 17 லட்சத்து 50 ஆயி ரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 லட்சத்து 50 ஆயி ரம் பேர் குறைவு என்பது குறிப்பிடத்தக்கதாகும். எண்ணிக்கை குறையும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டாலும், இவ்வளவு விரைவாக அது ஏற்படும் என்பதை சீனா எதிர்பார்க்க வில்லை. 2022 ஆம் ஆண்டில் 95 லட்சத்து 60 ஆயி ரம் குழந்தைகள் பிறந்தன. அதேவேளையில், 1 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரம் இறப்புகள் ஏற்பட்டன. கடைசியாக 1960ஆம்ஆண்டில் மக்கள் தொகை குறைந்தது. அப்போது வர லாற்றில் இல்லாத அளவிலான பஞ்சத்தை அந்த நாடு சந்தித்தது. அதன்பிறகு தற்போது தான் மக்கள்தொகை குறைந்திருக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கம் பெரிய சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனையாக உரு வெடுத்ததால், ஒரு குழந்தை என்ற கொள்கை களை சீனா அறிமுகப்படுத்தியது. அந்தக் கொள்கைகளை கறாராக நடைமுறைப்படுத்த வும் செய்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே மக்கள்தொகை நிலையான தன்மைக்கு வந்தது. ஆனால், பெரும் அளவில் குறையும் என்ற நிலை வந்தபோது, குடும்ப அளவைத் தளர்த்தலாம் என்று முடிவெடுத் தார்கள். 2016ஆம் ஆண்டில் இருந்து தளர்த்தி வந்து, 2021 ஆம் ஆண்டில் மூன்று குழந்தை கள் என்று தளர்த்தியுள்ளனர்.
ஆனால், தளர்த்தப்பட்ட கொள்கை பெரும் பலனளிக்கவில்லை. “அதற்கு, சின்ன குடும்பம் என்பதற்கு சீனர்கள் பழகிவிட்டார்கள் என்பதே காரணம்” என்று விக்டோரியாவில் உள்ள ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் சியுஜியான் பெங் கூறுகிறார். எண்ணிக்கை அதிகரித்தால் குடும்பத்திற்கான செலவும் அதிகரிக்கும் என்று பல குடும்பங்கள் கருதியதையும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். “குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக்க இன்னும் கூடுதலாக பலனளிக்கும் கொள்கைகளை சீன அரசாங்கம் கொண்டு வர வேண்டும். இல்லை யென்றால், மக்கள் தொகை மேலும் குறை யும்” என்று சியுஜீயான் பெங் பரிந்துரைக்கிறார்.
ஊக்கத்தொகை
திருமணமானவுடன் குழந்தை பெற்றுக் கொள் ளாமல் ஓரிரு ஆண்டுகள் தள்ளிப் போடுவதும் சீனக் குடும்பங்களில் வழக்கமானதாக மாறி யிருந்தது. பிறக்கும் முதல் குழந்தைக்கு சீன அரசு 3 ஆயிரம் யுவான்(444 அமெரிக்க டாலர்) தருவதாக அறிவித்துள்ளது. மூன்றாவது குழந்தைக்கு 10 ஆயிரம் யுவான் தரப்படும். இத னால் குழந்தைகள் பெற்றுக் கொள்வது அதி கரிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜினான் நகரத்தில் இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தம்பதியினருக்கு மாதம் 600 யுவான் நிதி தரப்படுகிறது. மக்கள் தொகை குறைவது மட்டுமில்லாமல், சராசரி வயது அதி கரிப்பதையும் பெரும் சவாலாக சீன அரசு பார்க்கிறது. பிறப்பு எண்ணிக்கையை ஊக்கு விப்பதன் மூலம் இந்த சவாலை எதிர்கொள்ள முடியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இல்லையென்றால், 2100 ஆம் ஆண்டு வரையில் பெரும் நெருக்கடியை சீனா சந்திக்க நேரிடலாம் என்று சியுஜீயான் பெங் உள்ளிட்டோர் எச்சரிக்கிறார்கள்.
திட்டமிட்டபடி, தனது இலக்குகளை அடைவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் சீனா, இந்த சவாலையும் வெற்றிகரமான எதிர்கொள்ளும் என்று அதே வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.