“சந்திரயான் 3” விண்கலத்தின் “உந்துவிசை தொகுதி” புவியின் சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றப்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் தெரி வித்துள்ளது.
மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி யடைந்ததற்கு பொறுப்பேற்று மிசோ தேசிய முன்னணி கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் சோரம்தங்கா.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு விசாரணையை டிசம்பர் 7-க்கு ஒத்தி வைத்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்பார். அவரைத் தவிர வேறு யாரும் முதல்வராக வாய்ப்பில்லை என்ற கருத்தால் சிவசேனா ஷிண்டே தரப்பு மற்றும் தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சிறுபான்மையினருக்கான மாநில பட் ஜெட்டை உயர்த்துவதில் என்ன தவறுள் ளது. இஸ்லாமியர்களை மட்டுமே பாதுகாப்ப தாகக் கூறியதாக சில ஊடகங்கள் திரித்துக் கூறு கின்றன. இஸ்லாமியர்கள் உள்பட அனைத்து சமூ கத்தினரையும் பாதுகாப்பேன் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
மோசடி வழக்கு தொடர்பாக பஞ்சாப் மாநி லத்தில் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (SAIL) அதிகாரிகள் மற்றும் ஸ்டேட் பேங்க் நிறுவன ஊழியர் என மூவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் மொத்தம் ரூ.2.45 லட்சம் அபராதம் விதித்து மொஹாலி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடகாவின் விஜயபுரா பகுதியில் மக்காச் சோளம் பதப்படுத்தும் தொழிற்சாலையின் குடோன் இடிந்து விபத்துக்குள்ளானதில் 7 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரி ழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்ச மும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப் பீடு வழங்கப்படும் என கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒன் றிய காவல்துறை அதிகாரி எனக்கூறி தொழி லதிபர் வீட்டில் ரூ.60 லட்சம் ரொக்கம், 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிராம் தங்கநகைகளைக் கத்தி முனையில் கொள்ளையடித்துச் சென்றது கொள்ளைக் கும்பல்.
பஞ்சாப் 15 வயது சிறுமி கும்பல் பாலியல் வன்கொடுமை
பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூர் மாவட் டத்தில் உள்ள தடகள மைதானம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவர் நாள்தோறும் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடு வது வழக்கம். நவம்பர் 30 அன்று மாலை யில் வழக்கம் போல ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த பொழுது சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று போதைப் பொருளை (ஹெராயின்) கொடுத்து பாலியல் வன்கொடுமை செய் துள்ளது. சிறுமியின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு மட்டுமே செய்துள்ளனர். சம்பவம் நடந்து 4 நாட் களை கடந்துள்ள நிலையில் குற்றவாளி கள் இன்னும் கைது செய்யப்பட வில்லை.