world

img

தீக்கதிர் உலக செய்திகள்

நேட்டோ தலைமையகத்தில்  சுவீடன் கொடி ஏற்றப்பட்டது

சுவீடன் நாட்டுக் கொடி நேட்டோ தலை மையகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. நேட்டோ கூட்டணியில் 32 ஆவது உறுப்பின ராக சுவீடன் இணைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பெல்ஜியம் நாட்டில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் அந்நாட்டு கொடி அதிகாரப்பூர்வமாக ஏற்றப்பட்டது.ராணுவ ரீதி யாக ரஷ்யாவை சுற்றிவளைக்க அமெரிக்கா நேட்டோ கூட்டணியில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளை இணைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலியர்களைக் கொன்ற  ராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு

இஸ்ரேலியர்களை படுகொலை செய்த ராணுவ பிரிகேடியருக்கு ராணுவ ஆலோசகராக பதவி உயர்வு கொடுக்க பெஞ்ச மின் நேதன்யாகு நேர்காணல் செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹமாஸ் தாக்குதலின் போது ஒரு வீட்டிற் குள் ஹமாஸ் வீரர்கள் இருப்பதாக கூறி டாங்கி மூலம் குண்டு வீச பிரிகேடியர் பராக் ஹிரா மின் உத்தரவிட்டார். அத்தாக்குதலில் இரட்டை குழந்தைகள் உட்பட 13 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

துருக்கியில் இருந்து டிரோன்களை   இறக்குமதி செய்த மாலத்தீவு

மாலத்தீவு அரசு நாட்டின் பாது காப்பிற்காக துருக்கியில் இருந்து ஆளில்லா விமானங்களை வாங்கி யுள்ளது. இதன் மூலம் தன் நாட்டின் கடற்கரை எல்லைகளில்  தீவிரமான  கண்காணிப்பு பணியை மேற்கொள்ள முடியும் என அந்நாடு தெரி வித்துள்ளது. மேலும் இந்த டிரோன்களுக் கான தளங்களை நிறுவும் பணிகளையும் அந் நாடு மேற்கொண்டு வருகிறது.ஜனாதிபதி முக மது முய்சு துருக்கி சென்ற போது டிரோன்களை வாங்க ஒப்பந்தம் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

குடும்ப உறுப்பினர்களுக்கு  இங்கிலாந்து அரசு தடை 

இங்கிலாந்து அரசு கடுமையான விசா விதிமுறைகளை அறிமுகப்படுத்தி யுள்ளது. இந்தியா உட்பட வெளிநாட்டில் இருந்து  பராமரிப்புப் பணியாளர்களாக இங்கிலாந்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள்  தங்கள் குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்திற்கு அழைத்து வருவதைத் தடுக்கும் வகையில் விதிகளை மாற்றியுள்ளது. கடந்த ஆண்டு பராமரிப்புத் துறையில் உள்ள  1 லட்சம் வெளிநாட்டு தொழி லாளர்களுடன் 1,20,000 குடும்ப உறுப்பினர்க ளும் அந்நாட்டுக்கு வந்துள்ளனர்.

ஹைட்டி பிரதமர்  பதவி விலகல் 

கரீபியன் நாடான ஹைட்டியில் நில வும் உள்நாட்டுப் போர்ச் சூழல் மற்றும் குழப்பங்களுக்கு இடையே அந்நாட்டு   பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலகியுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு நாட்டின்  ஜனாதிபதி ஜோவெ னல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்ட தைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவுடன் இவர் பிரதமரானார்.தற்போது அந்நாட்டிற்குள் ஆயுதக் குழுக்கள்  நடத்தி வரும்  தாக்குதல் கார ணமாக 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உள்நாட்டிற்குள் இடம் பெயர்ந்துள்ளனர்.