world

img

சிலி மக்கள் மனசுல யாரு...? இன்று முடிவுகள் தெரியும்

சான்டியாகோ, டிச.19- சிலியின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான இரண்டாம் சுற்றுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. நவம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வ தற்கான முதல் சுற்றுத் தேர்தல் நடை பெற்றது. இதில் போட்டியிட்ட வேட்பா ளர்கள் யாருக்கும் 50 விழுக்காடு வாக்குகள் கிடைக்கவில்லை. இத னால் முதலிரண்டு இடத்தைப் பிடித்த வலதுசாரி வேட்பாளர் ஜோஸ் அன்டோனியோ கஸ்ட் மற்றும் இடது சாரி வேட்பாளர் காப்ரியல் போரிக் ஆகிய இருவரும் இரண்டாவது சுற்றுப் போட்டியில் உள்ளனர். முதல் சுற்றில் கஸ்ட் 28 விழுக்காடு வாக்குகளும், போரிக் 26 விழுக்காடு வாக்குகளும் பெற்றனர். அதில் கஸ்ட் முதலிடத்தைப் பிடித்தாலும், இரண் டாவது சுற்றில் போரிக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சில கருத்துக் கணிப் புகளில் வெற்றி யாருக்கு என்று முடிவு செய்ய முடியாத நிலை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த இருவருக்கும் இடையிலான போட்டி பற்றிக் கருத்து தெரிவித்த அரசியல் வல்லுநர்களில் ஒருவரான ஸ்ரேயா முகர்ஜி, ‘‘நடுநிலை என்ப தெல்லாம் இல்லை. இரண்டு தீவிர முகாம்களில் எதன் பக்கம் மக்கள்  நிற்கப் போகிறார்கள் என்பதுதான் தற் போதைய கேள்வி’’ என்கிறார். 1990 ஆம் ஆண்டில் சிலி ஜனநாயகத்திற் குத் திரும்பியது. அப்போதிலிருந்து நடைபெற்ற தேர்தல்களில் இந்தத் தேர்தல்தான் கொள்கை ரீதியாக இரு துருவங்களாக இருக்கும் இருவரில் ஒருவரைத் தேர்வு செய்யும் நிலை க்கு சிலி மக்கள் தள்ளப்பட்டிருக்கி றார்கள் என்கிறார் அவர். வாக்குப்பதிவு விழுக்காடும் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது. அதிக வாக்குப்பதிவு நிச்சயமாக இடதுசாரி வேட்பாளருக்கு ஆதரவாக இருக் கும். 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு களில் சமூக நலத்திட்டங்களை வெட்டு வதற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தனர். புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க அவை தேர்வு செய்யப் பட்டுள்ளது. அதை நடைமுறைப் படுத்த யாரை ஜனாதிபதியாக மக்கள் தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது இன்று வெளியாகும் முடிவு களில் தெரிய வரும்.