world

img

பாலஸ்தீனச் சிறுவனை கொலை செய்த காவலருக்கு விருது கொடுக்க வேண்டுமாம்!

டெல் அவிவ்,மார்ச் 14-  மார்ச் 13 அன்று இஸ்ரேல் காவல்துறையின் ஸ்னைப்பர் வீரர் ஒருவர் 12 வயது சிறுவன் ஒருவனை சுட்டுக் கொலை செய்தார். அந்த காவலருக்கு விருது கொடுக்க வேண்டும் என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென் க்விர் கூறியுள்ளார்.  ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் ஜெருசலேம் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு காவல் படைகள் பாலஸ்தீன குழந்தைகளை தொடர்ந்து படுகொலை செய்து வருகின்றன. மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை இஸ்ரேல் அரசு,  மேற்குக் கரையில் 34 பாலஸ்தீன குழந்தைகளைக் கொன்றதாக  அவ்வறிக்கையில்  தெரிவித்துள்ளது.    மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, மேற்குக் கரையில்  427 பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் மார்ச் மாத துவக்கத்தில் இஸ்ரேல் காவல்துறை நடத்தி வரும் வன்முறை களையும், தீவிரவாதத்தையும் எதிர்த்து  ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம்  பகுதியில் பாலஸ்தீன மக்கள் போராட்டம் நடத்திய போது ரமி ஹம்தான் அல்-ஹல்ஹௌலி என்ற 12 வயது  பாலஸ்தீனச்  சிறுவனை இஸ்ரேல் ஸ்னைப்பர் காவலர் ஒருவர் மறைந்திருந்து சுட்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் ஹடாசா மருத்துவமனையில்  அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். அப்போது  உலகம் முழுவதும் அந்த கொலைக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.  இந்நிலையில் அந்த கொலை குறித்து விசாரணை நடத்துவது போல இஸ்ரேல் அரசு மக்களை ஏமாற்றியது. ஆனால் தற்போது அந்த கொலைகார காவலருக்கு இஸ்ரேலின் பாது காப்புத்துறை அமைச்சர் பென் க்விர் மரியாதை வேறு செலுத்தியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிராக நீங்கள் இப்படித்தான் துல்லியத்து டன்  செயல்பட வேண்டும் என  இனப்படுகொலை யை மேலும் தூண்டியுள்ளார். அந்த விசாரணை உத்தரவு வந்த போது, நியாயப்படி அந்த காவலர் மீது விசாரணை நடத்தக்கூடாது. மாறாக விருது கொடுத்து கவுர விக்க வேண்டும் என அப்பாவிச் சிறுவனை கொலை செய்தது நியாயம் என்று கூறி இன வெறியை அப்பட்டமாக வெளிப்படுத்தி யுள்ளார் இஸ்ரேல்  நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர்.