ஜோகன்னஸ்பர்க், ஆக. 24 - உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு வைத்திருக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன் னஸ்பர்க் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர், கூட்டமைப்பில் புதிய நாடுகள் இணைவதை வரவேற்றுள்ளனர். ஆகஸ்ட் 22 முதல் 24 வரை 15 ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்கா தலைமையில் நடை பெற்றது. உச்சி மாநாட்டின் முதல் நாள் வர்த்தக மாநாடு நடை பெற்றது. இரண்டாம் நாள் அமர்வில் தலைவர்கள் உரையாற்றினர். கூட்ட மைப்பில் புதிய நாடுகளை இணை ப்பது, நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது, நீண்டகால சர்வதேச பிரச்சனைகளை அமைதியான முறையில் முடிவிற்கு கொண்டுவருவது,கூட்டமைப்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்த நிலையான வளர்ச்சி உள்ளிட்டவை முக்கிய இடத்தைப் பிடித்தன.
மேலும் தொடர் ஏற்ற இறக்கங் களை கொடுக்கும் டாலருக்கு மாற்று குறித்தும் விவாதிப்பதுடன், பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கான புதிய நாணயத்தை உருவாக்க வேண்டு மென பிரேசில் ஜனாதிபதி லூலா அழைப்புவிடுத்தார். பிரிக்ஸ் நாடுகள் வணிக ஒத்து ழைப்பில் கவனம் செலுத்த வேண்டு மெனவும், பொருளாதாரத்தில் மேற்கு லக நாடுகளின் ஆதிக்கத்தால் உல கம் பனிப்போர் பதற்றத்தில் இருக்கி றது; எனவே அனைத்து நாடுகளும் அமைதியான வழியிலேயே வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும் எனவும் சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறினார். தேசிய பாதுகாப்புக்கு பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் அல்லது உயர் பிரதிநிதிகளின் கூட்டம் ஆகியவற்றை முறையாக பயன்படுத்தி ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டிற்கு ஆதரவளித்து முக்கிய சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சனை களில் ஒருங்கிணைப்பை மேம்படுத்தி தீவிரமான அரசியல் பிரச்சனைகளை தீர்க்க அமைதியான வழியை கடை பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது.
மாநாட்டில், இணையவழியில் இணைந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடி மிர் புடின், “மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற வெறியே உக்ரை னின் நெருக்கடிக்கு காரணம்” என்றும் மேலும் அப்போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். மேற்கு லக நாடுகளின் ஆதிக்கத்தை சுட்டிக் காட்டி அனைத்து வகையான மேலா திக்கத்திற்கும் நாங்கள் எதிரான வர்கள் என்று குறிப்பிட்டார். மேலும் மேற்குலக நாடுகள் உக்ரைனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி யை கவிழ்க்க சதி செய்தனர் என்றும் பின்னர் சதிக்கு உடன்படாததால் கொடூரமான போரை தூண்டி விட்டு அழிப்பு நடவடிக்கைகளை முன் னெடுக்கின்றன என்றும் குற்றம்சாட்டி னார்.
ஆப்பிரிக்காவிற்கு உதவி
வரும் ஆண்டுகளில் ஆப்பிரிக்கா விற்கு விவசாயத் துறையில் அனை த்து உதவிகளையும் செய்வதாக பிரேசில் ஜனாதிபதி லூலா தெரிவித் தார். அனைத்து ஆப்பிரிக்க நாடு களுக்கும் வணிக ரீதியாகவும் இலவசமாகவும் தானியங்களை வழங்க தயாராக இருப்பதாக புடின் தெரிவித்தார். மேலும் புர்கினா பாசோ, சோமாலியா, மாலி, ஜிம்பா ப்வே, மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் எரீத்ரியா ஆகிய ஆறு நாடுகள் 25 முதல் 40 ஆயிரம் டன்கள் வரை இலவச தானியங்களை பெறும் என்றும் புடின் தெரிவித்தார்.
புதிய உறுப்பினர்கள்; புதிய நாணயம்
இறுதி நாள் பிரிக்ஸ் அமர்வில் அர்ஜென்டினா, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை உறுப்பினர் களாக இணைக்க ஒப்புதல் அளிக்கப் பட்டது. இந்த நாடுகள் 2024 ஜனவரி 1 முதல் முழு உறுப்பினர்களாவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் பிரிக்ஸ் ஒத்து ழைப்புக்கான புதிய தொடக்கப் புள்ளி யாக உள்ளது. உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கான சக்தியை வலுப் படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கும். பிரிக்ஸ் நாடுகள் எதிர்கால வர்த்த கத்தில் “பணம் செலுத்துவதற்கான புதிய நாணயத்தை” உருவாக்குவது குறித்து ஆய்வு செய்வதற்கான தீர்மானத்திற்கும் இம்மாநாடு ஒப்பு தல் அளித்துள்ளது.