world

img

இஸ்ரேலுக்கு மீண்டும் அடி ஏவுகணைகளைத் தடுத்து சிரியா சாகசம்

டமாஸ்கஸ், ஜூன் 11- ஒரே வாரத்தில் இரண்டாவது முறை யாக இஸ்ரேல் செலுத்திய ஏவுகணைக ளை மறித்து தகர்த்தெறிந்து சிரியா சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் மத்திய ஆசிய நாடுகள் மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பல ஏவுகணைகளை சிரியாவின் தென்பகுதியில் உள்ள சில நகரங்கள் மீது இஸ்ரேல் ஏவியது. அதில் பெரும்பாலான ஏவுகணைகளை சிரியா வின் பாதுகாப்பு கட்டமைப்பு மூலமாக மறித்துத் தகர்த்தெறிந்தனர். இந்த எதிர்வினை இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிற்கும் ஆச்சரி யத்தை ஏற்படுத்தியது. சொந்தமாகவே, அந்நிய நாடுகளின் தாக்குதல்களுக்கு பதி லடி கொடுக்கும் பலம் சிரியாவிற்கு உள்ளது என்பதையே இது எடுத்துக்காட்டியது. இந்நிலையில், மீண்டும் எதிர்பாராத வேளையில் தனது ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவியிருக்கிறது. ஆனால், எந்நேரமும் இதுபோன்ற தாக்குதல்கள் நிகழலாம் என்று எதிர்பார்த்திருந்த சிரியா, கிட்டத்தட்ட அனைத்து ஏவுகணைக ளையும் மறித்து தகர்த்தது. தடுப்பை மீறி சில ஏவுகணைகள் சிரியாவின் பகுதிகளுக்குள் விழுந்தாலும் உயிர்ச்சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை.

ஒரேயொருவர் காயமடைந்தார். அவருடைய உயிருக்கு ஆபத்தில்லை என்று சிரியாவின் அதிகா ரப்பூர்வ செய்தி நிறுவனமான சனா தெரிவித்திருக்கிறது. இதுபோன்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும், ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருக்கும் சிரியா கடிதம் எழுதி யிருந்தது. அதில், “சிரியா மீது இஸ்ரேல் தொடுக்கும் தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கோட்பாடுகளுக்கு மாறாக இருக்கிறது. அப்படியிருக்கையில் இந்தத் தாக்குதல்கள் குறித்து ஒரு தெளிவான கருத்தை ஐக்கிய நாடுகள் சபையும், பாது காப்பு கவுன்சிலும் உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது. 2011 ஆம் ஆண்டிலிருந்தே பயங்கர வாதிகளின் வெறியாட்டத்தில் சிரியா சிக்கி யிருந்தது. தக்பிரி பயங்கரவாத அமைப்பு சிரியாவின் வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த பயங்கர வாத அமைப்புக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் ஆதரவு இருந்தது. ரஷ்யா மற்றும் லெப னானின் ஹெஸ்புல்லா அமைப்பு ஆகிய வற்றில் உதவியோடு பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் சிரியா வெற்றி கண்டது. பயங்கரவாதிகளை முன்னிறுத்தி, சில பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றி வைத்துள் ளது. அந்தப் பகுதியில் இருந்துதான் ஏவு கணைகளை ஏவி வருகிறது. மீண்டும் சிரியா வுக்கு உதவ ரஷ்யா முன்வந்துள்ளது.