ரியாத், மார்ச் 18- சீனாவுடன் நடக்கும் பெட்ரோலியப் பொருட்கள் வர்த்தகத்தில் அந்நாட்டின் நாணயமான யுவானைப் பயன்படுத்த சவூதி அரேபியா ஆலோசனை நடத்தி வருகிறது. சீனாவுக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையிலான வர்த்தகம் அதிகரித்து வரு கிறது. பெரும் அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை சவூதி அரேபியா மேற்கொள் கிறது. அந்நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதி இந்த ஏற்றுமதி மூலமாகவே எட்டப் படுகிறது. எண்ணெய் ஏற்றுமதியில் 25 விழுக்காடு சீனாவுக்குதான் செல்கிறது. உத்தரவாதமான சந்தையாக சீனா மாறி யுள்ளது. பெருந்தொற்றால் உலக நாடு கள் பாதிக்கப்பட்டபோதும் சவூதி அரேபியா வில் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக் குமதியை சீனா மேற்கொண்டு வந்தது. இரு தரப்பிலும் உள்ள அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டிலிருந்தே நாணயப் பரிமாற்றம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கி றார்கள்.
எரிபொருள் வர்த்தகத்தில் டாலரு க்குப் பதிலாக யுவானைப் பயன்படுத்த முயற்சிக்கலாமா என்று ஆலோசனை நடக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை சவூதி அரேபியா எதிர்பார்க்கவில்லை. அந்த நடவடிக்கை யுவானுக்கு மாறும் முயற்சியை அதிகப்படுத்தியுள்ளது. இது குறித்து சீனா தயாரித்துள்ள அறிக்கையில், “சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதியில் 25 விழுக்காடு சீனாவால் வாங்கப்படுகிறது. யுவானைப் பயன்படுத்தி விற்பனை செய்தால் சீனா நாணயத்தின் மதிப்பு அதிகரிக்கும்.
யுவான் மூலமாக வர்த்தகத்தை நடத்த லாம் என்று சவூதி அரேபியாவும் ஆலோ சனை மேற்கொண்டு வருகிறது. பெட்ரோ டாலர் என்பதற்குப் பதிலான பெட்ரோ யுவான் என்ற முன்மொழிவு வைக்கப்படு கிறது “ என்று கூறப்பட்டுள்ளது. இதுவரையில் சவூதி அரேபியாவின் அனைத்து எண்ணெய் வர்த்தகமும் டால ரில்தான் செய்யப்படுகிறது. 25 விழுக்காடு வர்த்தகம் சீனாவுடன் நடப்பதைக் காரணம் காட்டி யுவானுக்கு மாறினால், எண்ணெய் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் நெருக்கடியால் சவூதி அரேபி யாவை மேலும் எண்ணெய் உற்பத்தி செய்ய அமெரிக்கா சொல்லும் நிலையில், நாணயப் பரிமாற்றம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.