நியூயார்க்,மார்ச் 12- இஸ்லாமியர்களின் புனித பண்டிகை மாதமான ரம்ஜான் மாதம் துவங்கிய நிலையில் காசா மற்றும் சூடானில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மார்ச் 11 அன்று ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ரம்ஜான் மாதம் துவங்கியுள்ள நிலையில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் தங்கள் மத கடமைகளை துவங்கியுள்ளனர். இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படு கொலை தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வரு கிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் படுகொலையாகி வருகின்ற னர். இந்நிலையில் துப்பாக்கிகளை அமைதிப் படுத்தி ரம்ஜான் பண்டிகைக்கு மதிப்பளிக்க வேண்டும்.போரினால் பாதிக்கப்படும் மக்க ளின் உயிரை காக்கும் வகையிலான உதவிகளை தேவையான வேகத்திலும் அதிகளவிலும் வழங்குவதை உறுதிசெய்ய அனைத்து தடைக ளையும் நீக்க வேண்டும். இது எனது வலுவான வேண்டுகோள் என ஐ.நா பொது செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் பேசியுள்ளார். குட்டரெஸ் ஐ.நா பொதுச்செயலாளராக பதவி வகித்த இத்தனை ஆண்டுகளில் இஸ்ரேல்- பாலஸ்தீன போரில் தான் அதிகளவிலான பொது மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் மிக மோசமான மனிதாபிமான பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலில் தேவையை விட மிக மிக குறைவாகவே நிவாரணப் பொ ருட்கள் பாலஸ்தீனர்களுக்கு வழங்கப் படுகின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மனிதாபிமானச் சட்டம் சிதைக்கப் பட்டுள்ளது. மேலும் ரஃபா எல்லையில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களும் மேலும் நடக்கப் போகும் தாக்குதல் குறித்தான அறிவிப்பு களும் அங்கு பெரும் அச்சுறுத்தலை உருவாகி யுள்ளதையும் அது பாலஸ்தீனர்களை மேலும் மிக மோசமான நரகத்திற்குள் தள்ளும் என்பதை யும் குறிப்பிட்ட அவர் சூடானில் நடக்கும் போரையும் இம்மாதத்தில் நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சூடானில் அந்நாட்டு ஆயுதப்படைகளுக்கு இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போரால் பசி,பஞ்சம் தீவிரமடைந்து வருகிறது. இத னால் சூடான் மக்களின் நலனுக்காக அந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் அமைதிச் சூழல் நிலவ வேண்டும். அதற்காக அனைத்து முன்னெடுப்பு களையும் மாற்றங்களையும் செய்ய வேண்டும் என்றும் உலகம் முழுவதும் உள்ள அரசியல், மத மற்றும் சமூகத் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.