இந்திய பிரதமருக்கு எஸ்பிஜி என்ற நாட்டின் உயர் தர சிறப்புமிக்க கமாண்டோ பிரிவினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். பிரதமர் எங்கு சென்றாலும் 10-க்கும் மேற்பட்ட எஸ்பிஜி வீரர்கள், அவரைப் பின் தொடர்ந்து வாக்கி டாக்கி மூலம் பலத்த பாதுகாப்பில் ஈடு படுவார்கள். ஆனால் பிரதமர் மோடி தன்னை காக்கும் எஸ்பிஜி வீரர்களை விட தன்னை புகைப்படம் எடுக்கும் கேமராமேன்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறார். அதாவது மோடியின் பக்கத்தில் எஸ்பிஜி வீரர்களை விட கேமராமேன்கள்தான் சுற்றி வருகின்றனர். இதுநாள்பட்ட செய்தியாக இருந்தாலும், திருப்பதி கோவிலில் இந்த விவகாரம் வீடியோ மூலம் நேரலையாக போட்டுடைக் கப்பட்டுள்ளது.