world

ஒருவர் பலி

இஸ்லாமாபாத், மே 13- பாகிஸ்தானின் கராச்சி நகரில் பாது காப்புப் படையினர் பயணம் செய்து கொண்டிருந்த வண்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதல் குறித்து விசார ணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த வெடி குண்டுத் தாக்குலுக்கு ஒருவர் பலியான தோடு, 13 பேர் காயமடைந்தனர். தாக்குதலின் போது அருகில் இருந்து பல்வேறு வண்டிகள் மற்றும் கட்டிடங்களின் ஜன்னல்கள் பெரும் சேதமடைந்தன. தாக்குதலில் உயிரிழந்தவர், குண்டு வெடித்தபோது அந்த இடத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தவராவார். காய மடைந்தவர்களில் இருவர் அமலாக்கத் துறை அதிகாரிகளாவர். காயமடைந்த வர்களில் நான்கு பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இரு சக்கர வண்டி ஒன்றில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்ட தாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரையில் யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கராச்சி காவல்துறைத் தலைவர் ஷார்ஜீல் கரால் தெரிவித்துள்ளார்.