world

விவசாய மேம்பாடு - கிராமப்புற நவீனமயம் சீன ஐந்தாண்டுத்திட்ட இலக்குகள்

பெய்ஜிங், டிச.9- தனது 14ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில்(2021-2025) விவசா யத்தை மேம்படுத்துவது மற்றும் கிராமப்புற நவீனமயம் ஆகியவை பற்றிய தனது திட்டத்தை மக்கள் சீனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்க ளிடம் பேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற விவகாரத்துறை அமைச்சர் டெங் சியோகாங், “ஐந் தாண்டு காலப் பணிகளுக்குப் பிறகு விவசாயத்துறை மேலும் ஒருங்கிணைக்கப்பட்டு, பலப் படுத்தப்பட்டிருக்கும். விவசாயம் மற்றும் கிராமப்புறப்பகுதிகள் நவீனமயமாக்கப்பட்டிருக்கும். இதுவே இந்தத் திட்டத்தின் இலக் குகளாக உள்ளன” என்றார்.

தனது வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளுதல் மற்றும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுதல் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் தொடர்ந்து ஐந்தா ண்டுத் திட்டங்களை மக்கள் சீனம் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்தி லும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குக ளை அடைந்து வருவது இந்தத் திட்டங்களின் சிறப்பம்சமாக இருந்து வருகிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு வரும் ஐந்தாண்டுத் திட்டம் என்பதால் உள்நாட்டுப் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியில் கவ னம் செலுத்தப் போகிறார்கள். இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றினால், அதற்கு அடுத்த பத்தாண்டுகளில் கிராமங்கள் பெரும் முன்னேற்றத் தை காண வாய்ப்புள்ளது. குறிப் பாக, வறுமை ஒழிப்பு நடவடிக்கை களை பலப்படுத்தவும், அவற்றை மேலும் விரிவாக்கவும் வாய்ப்பு கள் கிடைக்கும் என்று திட்டக் குறிப்பு தெரிவிக்கிறது. கிராமப்புற நவீனமயமாக்கல் என்பது வறுமை ஒழிப்போடு இணைக்கப் படுகிறது. 2035 ஆம் ஆண்டில் இந்தப் பணிகள் முழுமை அடைய வாய்ப்புள்ளதாக நடப்பு ஐந்தாண்டுத் திட்டக் குறிப்பு கூறுகிறது.

கழிவு மேலாண்மை

கிராமப்பகுதியில் வசிப்பவர்க ளின் உடல்நலனில் முன்னேற்றம் காண, சுகாதாரத்துறையில் மாற் றங்கள் தேவைப்படுகிறது. குறிப் பாக, மனிதக்கழிவு மற்றும் சாக்க டைக் கழிவுகளை எப்படிக் கட்டுப் படுத்துவது என்பது பற்றிய திட்டங் கள் வகுக்கப்படுகின்றன. இவை நடப்பு ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போவதால் நிதி குறித்த பிரச்சனை எழாது. அதோடு, கிராமப்புற மக்களின் உடல்நலனில் பெரும் தாக்கத்தை இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தப் போகின்றன.