world

img

தீக்கதிர் உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்க  ஜெர்மனிக்கு அழுத்தம்

நீண்டதூரம் பயணித்து இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க  ஜெர்மனிக்கு இங்கிலாந்து அழுத்தம் கொ டுத்து வருகிறது. இங்கிலாந்தின் ராணுவ வீரர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக போர்க்களத்தில் இருப் பதாக ஜெர்மன் விமானப்படை அதிகாரிகள்  பேசிய ரகசிய உரையாடல்கள்  கசிந்தது.அதனால் உரு வான அழுத்தத்தை தொடர்ந்து உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கமாட்டோம் என ஜெர்மனி தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் ஏவுகணை வழங்க இங்கிலாந்து அழுத்தம் கொடுக்கிறது.

இணையத்தில் இருந்து  மறைந்த ஆய்வுக் கட்டுரைகள் 

20 லட்சத்திற்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள் இணையத்தில் இருந்து மறைந்துவிட்டன என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 70 லட்சம் கட்டு ரைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நான்கில் ஒரு கட்டுரை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வில்லை எனவும் தெரிய வந்துள்ளது. டிஜிட்டல் பாதுகாப்பு வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்ற வகையில் இல்லை என்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸில் கருக்கலைப்பு  சட்ட உரிமையானது

கருக்கலைப்பை சட்ட உரிமையாக்கி யுள்ளது பிரான்ஸ் அரசு. கருக் கலைப்பை சட்ட உரிமையாக்கும் வகையில் அரசமைப்பு சட்டத்தின் 38 ஆவது பிரிவில் திருத்தம் கொண்டு வர அந்நாட்டு நாடாளு மன்றத்தில் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கு எதிராக 78 வாக்குகளும் ஆதரவாக 780 வாக்கு களும் பதிவாயின. அதனைத் தொடர்ந்து தற்போது பிரான்சில் கருக்கலைப்பு சட்ட உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் மரபணு வங்கி திட்டம்

ஈரான் அரசாங்கம் பத்திரிகையா ளர்கள் உட்பட அதிக ஆபத்து  உள்ள துறைகளில் உள்ள தொழிலாளர்களுக் கான மரபணு வங்கியை உருவாக்க திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசியுள்ள ஈரானின் சட்ட மருத்துவ அமைப்பின் தலைவர் அப்பாஸ் மஸ்ஜிதி தீயணைப்புத்துறை, விமானத் துறை, ராணுவம், வனத்துறை, சுரங்கத்துறை களில் உள்ள பணியாளர்களிடம் இருந்தும் மர பணு மாதிரிகள் சேகரிக்கப்படும் என்றார்.

டிரம்ப் மீதான  தடை நீக்கம் 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெயர் வாக்குச் சீட்டில் இடம் பெறக்கூடாது என்ற தீர்ப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மாநில நீதிமன்றங்கள் தடைகள் விதிக்கும் சட்டங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் அறி வுறுத்தியுள்ளது. அவர் மீது வன்முறை தூண்டிய தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொலாராடோ  மாநில நீதிமன்றம் இந்த தீர்ப்பை கூறியது. இதனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவானது.