world

img

ஜப்பான் மேலவைத் தேர்தல் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை வலுக்கிறது

டோக்கியோ, மார்ச் 30- ஜப்பானில் நடைபெறவிருக்கும் மேலவைத் தேர்தலில் கூட்டு வேட்பா ளர்களை நிறுத்தி ஆளும் கூட்டணியை எதிர்கொள்வது என்று எதிர்க்கட்சிகள் முடிவு  செய்துள்ளன. ஜப்பானில் பிரதான எதிர்க்கட்சியாக ஜப்பான் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி உள்ளது. இக்கட்சியின் தலைவரான இசுமி கென்டாவை, ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவரான ஷி கசுவோ சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ஒற்றை உறுப்பினர் தொகுதிகளில் கூட்டாக வேட்பா ளர்களை நிறுத்துவது என்ற உடன்பாட்டை எட்டியுள்ளார்கள். அதற்கான வேட்பாளர் களைத் தேர்வு செய்வதற்கான பேச்சு வார்த்தையை விரைவில் துவக்குவது என் றும் முடிவு செய்துள்ளனர்.

ஜூலை 25, 2022 அன்று மேலவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 245 தொகுதி களைக் கொண்ட மேலவையில் தற்போது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆளும் தாராள ஜனநாயகக் கட்சி தனது மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. இந்த 245 தொகுதிகளில் தற்போது 124 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறு கிறது. 74 தொகுதிகளில் ஒற்றை, இரட்டை மற்றும் பல உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் முறையும், 50 தொகுதிகளில் கட்சி களுக்குக் கிடைக்கும் வாக்கு விழுக்காட்டின் அடிப்படையில் அவர்களின் பட்டியலில் இருந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யும் முறையும் இருக்கிறது. பேச்சுவார்த்தை பற்றி செய்தியாளர்களி டம் பேசிய ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர் ஷி கசுவோ, “பொது வேட்பா ளரைத் தேர்வு செய்யும் பணியை நாங்கள் முடுக்கி விட்டுள்ளோம்.

20 அம்சங்கள் கொண்ட பொது கொள்கை ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் எங்கள் ஒத்துழைப்பை மேற்கொள்வோம். பரஸ்பர மரியாதை என்ற கோட்பாட்டை இரு கட்சிகளும் பின்பற்ற வேண்டும்” என்றார். மக்கள் கூட்டணி என்ற பெயரில் இயங்கி வரும் பல்வேறு குழுக்களின் கூட்டமைப்பும் ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் அணி அவசி யம் என்று தெரிவித்துள்ளது. ஜப்பான் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர்களை சந்தித்த அவர்கள், ஒன்றுபட்ட எதிர்ப்புதான் அரசியல மைப்பைத் திருத்தம் செய்ய முற்படும் பணி யைத் தடுத்து நிறுத்தும் என்று தெரிவித்த னர். இதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு நின்று மக்கள் விரோத திருத்தங்களை எதிர்ப்பார்கள் என்று கம்யூ னிஸ்ட் கட்சியும் கூறியுள்ளது.