world

img

உடனுக்குடன் உலகளவில் சென்ற செய்தி

23வது மாநில மாநாட்டுச் செய்திகளை தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பணியை தீக்கதிர் நாளிதழும், தீக்கதிர் ஊடகக் குழுவும் சிறப்பான முறையில் செய்திருந்தது. தவிர சமூக வலைத்தளக் குழுவினரும் மாநாட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்து வாசகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கினர். சமூக வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கானோர் மாநாட்டு நிகழ்ச்சிகளை வரவேற்று கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். தீக்கதிர் இணைய பக்கத்தில் செய்திகள் உடனுக்குடன் வெளியானதும், தலைவர்களின் உரைகள் உடனடியாக முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டதும், வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தீக்கதிர் ஊடகக்குழு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த மாநாட்டு நிகழ்வுகளை சுமார் 6 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.