இஸ்ரேலுடன் ஒருமைப்பாட்டை அறிவித்ததன் மூலம், ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய நிலைப்பாட்டை மோடி மாற்றியுள்ளார்; மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்தபோது 80 நாட்கள் மௌனம் காத்த மோடி, இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்குவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பு இஸ்ரேலுடன் தனது ஒருமைப்பாட்டை ட்வீட் செய்தார் என சீ்த்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இரண்டு நாள் பயணமாக கேரளம் வந்தார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசி னார். அதன் ஒரு பகுதியாக பாலஸ் தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் அட்டூழியங்களை நிறுத்தக் கோரி சிபிஎம் எர்ணாகுளம் மாவட்டக் குழு சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி பேசினார். அப் போது அவர் மேலும் கூறியதாவது: பிரெஞ்சுக்காரர்களுக்கு பிரான்ஸ், ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து என்பதுபோல் பாலஸ்தீனம் பாலஸ்தீனர்களுக்கு சொந்தமானது என்று மகாத்மா காந்தி கூறினார். பாலஸ்தீனம் ஒரு நாடு என்கிற தகுதி பெறுவதற்கு முன்பே பாலஸ்தீன தூதரை அங்கீகரித்த நாடு இந்தியா. ஹமாஸை இந்தியா இன்னும் பயங்கரவாத அமைப்பாகக் கரு தாத நிலையில், எந்த அடிப்படை யில் இஸ்ரேலை மோடி ஆத ரிக்கிறார்? ‘மோடியின் இந்தியா’ மற்றும் ‘நேதன்யாகுவின் இஸ்ரேல்’ ஆகியவை இனக் கருத்தியலின் அடிப்படையில் ஒன்றுபட்டவை. ஆனால் உண்மையான இந்தியா இஸ்ரேலை ஆதரிக்கவில்லை. உள்ளூர் ஊடகங்கள் கூட நோயுற் றவர்களையும் குழந்தைகளையும் கூட கொல்லும் இஸ்ரேலிய போர் வெறியை அம்பலப்படுத்துகின்றன.
இந்தியாவிலும் சைப்ரஸிலும் செய்தது போல் பாலஸ்தீனத்தை யும் பிரித்த ஏகாதிபத்திய சதிதான் மோதலுக்கு அடிப்படைக் கார ணம். போரின் விளைவாக கொல்லப்படும் அல்லது அவர் களின் தாயகத்திலிருந்து துரத் தப்படும் மக்களுடன் ஒன்றுபடு வதை. அவர்களுக்கு ஆதரவு அளிப்பதை அடிப்படையாகக் கொண்டது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. 1967 ஆம் ஆண்டு ஐநா தீர்மானம் ஏற்கப் பட்டு பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேறிய பிறகும், ஹமாஸ் தாக்குதல் நடத்தி னால், அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி முன்னணியில் நிற்கும். பாலஸ்தீனத்தை விட பாலஸ்தீ னத்திற்கு வெளியே அகதிகள் முகாம்களில் அதிக பாலஸ்தீ னர்கள் வாழ்கின்றனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினால் பாலஸ்தீனம் காசா மற்றும் மேற்குக் கரை என சுருங்கி விட்டது. ஹமாஸை அழிக்கவே இந்த தாக்குதல் என் றால், ஹமாஸ் இல்லாத மேற்குக் கரையில் இந்த ஆண்டு 700 பொது மக்களை இஸ்ரேல் கொன்றது ஏன்? இவ்வாறு யெச்சூரி கேள்வி எழுப்பினார். கூட்டத்திற்கு சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் சி.என்.மோகனன் தலைமை தாங்கினார்.