மெக்சிகோ சிட்டி, நவ.9- உலகம் முழுவதும் ஏராளமான நாடுகள் மந்த நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கும்போது இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய மெக்சிகோ நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. மெக்சிகோவில் வலதுசாரிக் கொள்கைகள் தொடர்ந்து கடைப் பிடிக்கப்பட்டு வந்ததால் பொருளா தார ரீதியாகக் கடுமையான பின்னடை வினை அந்நாடு சந்தித்து வந்தது. இடது சாரிக் கொள்கைகளை முன்னிறுத்தி மக்களின் ஆதரவை வென்ற அம்லோ என்று அழைக்கப்படும் ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் இடது சாரிக் கொள்கைகளை உறுதியாக நடை முறைப்படுத்தினார். உலகம் முழுவதும் பல நாடுகள் மந்த நிலைக்கு தள்ளப் பட்டாலும் மெக்சிகோவை முன்னேற்ற மடையச் செய்வதில் அக்கொள்கைகள் பெரும் பங்காற்றியுள்ளன.
விவசாயத்தில் தன்னிறைவு, நலத்திட்டங்களை விரிவாக்குவது, பழங்குடியினருக்கு நீதி மற்றும் அனை வருக்குமான சுகாதாரத் திட்டம் ஆகிய வற்றை அம்லோ உறுதியாக நடைமுறைப் படுத்தி வருகிறார். பொருளாதாரக் குறி யீடுகள் அண்டை நாடான அமெரிக்கா வை விட நன்றாக உள்ளன. உலகின் பல்வேறு நாணயங்கள் டாலருக்கு எதிரான மதிப்பில் சரிவைச் சந்தித்து வருகின்றன. ஆனால் மெக்சிகோவின் நாணயமான பெசோவின் மதிப்பு அதி கரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு டாலருக்கு 21 பெசோ என்றிருந்தது. தற்போது அந்த மதிப்பு 19.59 பெசோவாக அதிகரித்திருக்கிறது. “விலைவாசி உயர்வை எதிர் கொள்வதில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை விட மெக்சிகோ சிறப்பாக செயல்பட்டிருக்கிறது” என்று அந்நாட்டின் சான்டான்டர் வங்கிகள் குழுமத் தலைவர் அனா போடின் கூறி யுள்ளார். ஒட்டுமொத்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, எரிபொருட் களின் விலைகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் உத்தியை மெக்சிகோ கடைப்பிடித்தது. பொரு ளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு அமைப்பின் உறுப்பு நாடுகளிலேயே எரிபொருள் விலைகள் கட்டுக்குள் இருக்கும் நாடாக மெக்சிகோ இருக்கிறது.
பலனளித்த நாட்டுடைமை
எரிபொருள் விலைகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கு எரி வாயு, எண்ணெய் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் அரசின் கட்டுப்பாட்டுக் குள் வந்ததே காரணமாகும். அம்லோ ஜனாதிபதியாகப் பொறுப் பேற்ற நான்கு ஆண்டுகளில் இவற்றை சாத்தியமாக்கியுள்ளார். அவர் எதிர்கொண்டு வரும் பிரதான சவாலாக, உணவுப் பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படாததே ஆகும். 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த நவீன தாராளமயக் கொள்கைகள் பாரம்பரிய விவசாய உற்பத்தி முறை களை சீரழித்து விட்டன. இதை மீட்கும் பணி மெக்சிகோவில் இன்னும் நிறைவு பெறவில்லை. அரசு மூலதனத்தை அதிகப்படுத்து வது மற்றும் மக்கள் நலக் கொள்கை களை நடைமுறைப்படுத்துவது ஆகி யவை மூலம் பல நாடுகளை விட வேலை வாய்ப்பை அதிகப்படுத்தியிருக் கிறார்கள். வேலைகளை வெளியிடங் களுக்குக் கொடுக்கும் முறைக்கு முற்றுப் புள்ளி வைத்திருப்பதால், நல்ல ஊதியத்துடனான நிரந்தர வேலைகள் அதிகமாகியுள்ளன. ஓய்வூதியம், வீட்டு வசதி மற்றும் கல்வி ஆகிய துறை களில் அரசு முதலீடு அதிகப்படுத்தப் பட்டுள்ளது. தேர்தல் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது, கியூபாவுடனான ஒற்றுமையைப் பலப்படுத்துவது, ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் உள்ளி ட்ட அம்சங்களில் எந்தத் தொய்வையும் காட்டாமல் ஜனாதிபதி அம்லோ பய ணிக்கிறார். மெக்சிகோவின் முக்கிய மான வளமான லித்தியத்தை வெறுமனே ஏற்றுமதி செய்யாமல், அதை வைத்து தொழிற்சாலைகளை மெக்சிகோவி லேயே அமைக்கும் பணியில் அரசு இறங்கியுள்ளது. லித்திய வளம் நாட்டுடைமையாக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே திட்டமாக மாயா ரயில் திட்டத்தை நிறை வேற்றுவதில் அம்லோ உறுதியாக இருக்கிறார். ஒட்டுமொத்த வளர்ச்சி யோடு, குறிப்பாக மெக்சிகோவின் வளர்ச்சி குறைந்த பகுதியான தென் கிழக்கில் மாயா ரயில் வளர்ச்சியைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க் கிறார்கள்.