மார்ச் 2 பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சர்வதேச அறைகூவல்
ரம்ஜானுக்கு முன்னதாக மார்ச் 9 அன்று ரஃபா மீது தீவிர தாக்குதலை நடத்த இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந் நிலையில் இனப்படுகொலையை நிறுத்த வலி யுறுத்தி மார்ச் 2 அன்று பாலஸ்தீனத்திற்கு ஆதர வாக சர்வதேச அளவில் (#ShutItDown4Pales tine) போராட்டத்திற்கு சர்வதேச மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட இடதுசாரி முற்போக்கு அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன. இனப்படுகொலை, ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போர்நிறுத்தத்தை வலி யுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
பால் இல்லாமல் பலியாகும் பாலஸ்தீன குழந்தைகள்
பால் இல்லததால் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இரண்டு மாத குழந்தை ஒன்று பலியாகியுள்ளது. ரஃபா எல்லையில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு உணவு,தண்ணீர்,பால் உள்ளிட்ட அத்தியா வசிய உணவு பொருட்களை இஸ்ரேல் ராணு வம் தடுத்து வருகிறது. இஸ்ரேல் உருவாக் கும் இந்த செயற்கை பஞ்சத்தால் போதுமான உணவும் ஊட்டச்சத்தும் இன்றி பெண்கள், குழந்தைகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
ரஷ்யா மீதான தடையை அதிகரிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்யா-உக்ரைன் போர் துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து ரஷ்யா மீது 13 ஆவது சுற்று தடைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடையில் ரஷ்யா அரசியல்வாதிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் என புதிதாக 106 நபர்களும் 88 நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியம் மீதும் சில தடைகளை விதிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
நிக்கி ஹேலியை தோற்கடித்த டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வுக்கான தேர்தல் சூடுபிடித்துள்ளது.குடி யரசுக் கட்சி சார்பிலான வேட்பாளருக்கான தேர்தலில் நிக்கி ஹேலியை அவரது சொந்த மாநிலமான தெற்கு கரோலினாவில் டொ னால்ட் டிரம்ப் தோற்கடித்து முன்னேறியுள் ளார். ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் நிக்கி மட்டுமே டிரம்ப்க்கு கடும் போட்டியாளராக இருந்த நிலையில் இந்த வெற்றி டிரம்புக்கு முன் னேற்றத்தை கொடுத்துள்ளது. உள்ளது.
லண்டன் மேயர் மீது அவதூறு: ஆளுங்கட்சி எம்பி இடைநீக்கம்
லண்டன் மேயர் மீது அவதூறு கூறிய இங்கிலாந்து எம்பி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீனத் தின் மீது நடத்தும் இனப்படுகொலை போர் இங்கிலாந்து அரசியலிலும் தாக்கத்தை ஏற் படுத்தி வருகிறது. இந்நிலையில் லண்டன் மேயர் சாதிக் கான் இஸ்லாமியர்களால் கட்டுப் படுத்தப்படுவதாக ஆளுங்கட்சியான பழமை வாத (கன்சர்வேடிவ்) கட்சியின் எம்பி லீ ஆண்டர் சன் கூறினார்.அதற்கு மன்னிப்பு கேட்காததால் அவரை அக்கட்சி இடைநீக்கம் செய்துள்ளது.