world

img

அமெரிக்க அடாவடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

பெய்ஜிங், ஜன.3- தன்னிச்சையாகவும், தங்களு க்கு சாதகமாகவும் வளர்ந்த நாடு கள் மேற்கொண்டு வந்த சர்வதேச உறவுகளுக்கும், அதை செயல் படுத்த மேற்கொள்ளப்பட்ட அடாவடி களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 15 நாடுகள் இணைந்து வர்த்தக உடன்பாட்டில் கையெழுத் திட்டுள்ளன. பிராந்திய பொருளாதார முழு மையான உறவு என்ற பெயரில் 15 நாடுகள் மேற்கொண்ட வர்த்தக உடன்பாடு ஜனவரி 1 முதல் நடை முறைக்கு வந்திருக்கிறது.

இதில் ஆசியன் அமைப்பைச் சேர்ந்த 10 நாடு களும், அந்த நாடுகளுடன் தொடர்ந்து  வர்த்தக உறவை வைத்திருக்கும் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கையெழுத்திட் டுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய தாராள வர்த்தக மண்டலமாக இந்த உறவு உருவாகியுள்ளது, உலகம் முழுவதும் தாராள வர்த்தக உடன்பாடுகளை அமெ ரிக்காவே மேற்கொண்டு வந்திருக்கி றது. தனது நலன்களை மனதில் கொண்டே அந்த உடன்பாடுகள் போடப்படும்.

அதில் பங்கேற்கும் நாடுகள் அமெரிக்க நலனுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் வேறு வழியில், எடுத்துக்காட்டாக, ராணுவ ரீதியாக அந்த நாடுகளை வழிக்கு கொண்டு வருவது அமெரிக்காவின் வழக்கமா கும். தற்போது போடப்பட்டுள்ள 15 நாடுகள் பங்கேற்கும் உடன்பாடு இந்த அடாவடித்தனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.  ஆசியன் அமைப்பில் உள்ள 10 நாடுகள் மற்றும் சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் உலக மக்கள் தொகையில் 30 விழுக்காட்டைக் கொண்டவையா கும். ஒவ்வொரு நாட்டின் உள்ளூர் சந்தையும் பரஸ்பரம் பெரிய அளவில் பயன்படும்.

அதோடு வர்த்தக ரீதியாக இந்தப் பிராந்தியத்தில் பொருளதார ஒருங்கிணைப்பை இது ஏற்படுத்தும். பங்கேற்பு நாடுகளுக்குள் இறக்குமதி வரியில் 90 விழுக்காடு இல்லாமல் போய்விடும் என்பது இந்த வர்த்தக உடன்பாட்டின் முக்கியமான அம்சமா கும்.  கோவிட் 19 மற்றும் அதற்கு முந்தைய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து பங்கேற்பு நாடுகள் மீள்வ தற்கு இந்த உடன்பாடு பெரிய அள வில் உதவும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. மிகப்பெரிய சந்தை கிடைக் கப்போகிறது என்பதோடு, வாய்ப்புக ளைப் பயன்படுத்தக்கூடிய வசதிக ளோடு இருக்கப்போகிறது என்று சீன வர்த்தக ஆய்வாளரான லியு சியாங்டாங் கூறுகிறார்.