world

img

5 மாத காலத்தில் 30 ஆயிரம் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்தது இஸ்ரேல்!

காசா, பிப்.28- காசா மீது 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் போர் அறிவிப்பு செய்து முழுமையாக 5 மாதகாலம்  ஆகிவிட்டது. இந்த 5 மாதத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம். இனப்படுகொலைப் போரை நிறுத்த இஸ்ரே லுக்கு சர்வதேச அளவில் அழுத்தங்கள் கொடுக்கப் பட்டாலும் இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் தாக்கு தலை தீவிரப்படுத்தி வருகிறது. அமெரிக்காவும் இனப்படுகொலைக்கு தொடர்ந்து  ஆயுதங்களை கொடுத்துக் கொண்டே போர் நிறுத்தத்தை கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறிக் கொள்கிறது.  மார்ச் முதல் வாரத்தில் தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமாகும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை இஸ்ரேல்-ஹமாஸுக்கு இடையே நடைபெறுகிறது என நியூயார்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பைடன் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு அவையில் 3 முறை போர் நிறுத்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும் அமெரிக்கா தீர்மானத்தை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  கொடூரக் கொலைகள்  காசாவில் பாதுகாப்பு என பெயரளவில் சொல்லிக்கொள்ளக் கூடிய ஒரே இடமாக இருந்த ரஃபாவிலும் இஸ்ரேல் கொடூரமான தாக்கு தல்களையும் கொலைகளையும் நடத்தி வருகிறது. பாலஸ்தீன சுகாதார அமைச்சகத் தரவுகளின்படி, அக்டோபர் 7 முதல், 30 ஆயிரம் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளது. இதில் 12 ஆயி ரத்துக்கும் அதிகமானோர் குழந்தைகள். 70,215 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  மேலும் அம்மக்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இஸ்ரேல் ராணு வம் தடுத்து வரும் நிலையில்  குழந்தைகள்  பட்டினி யால் இறக்கத் தொடங்கியுள்ளதாகவும், மனிதாபி மான உதவி உடனடியாக வழங்கப்படாவிட்டால், மரண  எண்ணிக்கை உயரும் என்றும் சுகாதார அமைச்சகம் கவலைகளை தெரிவித்துள்ளது.  ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை இந்நிலையில் பிப்.27 அன்று  ஜோர்டான் ராணுவம் போர் விமானங்கள் மூலம் காசா கட ற்கரை பகுதியில் பாராசூட் மூலமாக உணவுப் பெட்டி களை வீசிச் சென்றது.  ரம்ஜான் துவங்கும் நேரத்தில் ரஃபா பகுதியில் முழு அளவிலான தாக்குதலை நடத்தப் போவ தாக  இஸ்ரேல் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு சர்வ தேச அமைப்புகள்  மற்றும் நாடுகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடு களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள  27 உறுப்பு நாடுகளில் 26 நாடுகள் ரஃபா தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்து, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த அறிக்கை யில் கையெழுத்திட்டுள்ளன. மேற்குக் கரையில்  தொடரும் அட்டூழியங்கள்  இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின்  தாக்குதல் அதிகரித்து வருகிறது. அக்டோபர் 7 முதல்   இஸ்ரேல்  ராணுவத்தால்  108 குழந்தை கள் உட்பட 409  பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  இதே போல் 7,255 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள் ளனர்.