world

img

உள்ளூர் மக்களுக்கு அதிகாரம் அளித்தால்தான் ஜனநாயகம் நிலைநாட்டப்படும்

லடாக்கில் நடைபெறும் அதி காரத்துவ அத்துமீறல்,  வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு  இட ஒதுக்கீடு, தேர்த லில் பிரதிநிதித்துவம் வழங்குதல் போன்ற பல்வேறு பிரச்சனை களுக்குத் தீர்வு காண வேண்டு மென வலியுறுத்தி லே அமைப்பு,  கார்கில் ஜனநாயகக் கூட்டணி உறுப் பினர்கள் அடங்கிய 14 பேர் கொண்ட குழு தில்லியில் உள்துறை இணை யமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா ஆகியோரை  சந்தித்துப் பேசியது. இந்தச் சந்திப்பு சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்றது. அப்போது அமைச்சர்கள், 14 பேர் கொண்ட குழுவிடம் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வ மாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அடிக்கடி கூட்டங்களை நடத்துவதாக உறுதியளித்தனர். ஆனால், 14 பேர் கொண்ட குழு,  கோரிக்கைகள் எப்போது நிறை வேற்றப்படும் என்பதற்கு காலவரை யறை நிர்ணயிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

‘உள்ளூர் மக்களுக்கு அதிகாரம் கொடுங்கள்’

யூனியன் பிரதேசத்தில் நிரந்தர மாக வசிப்பவர்களுக்கு வழங்கப் படும் லடாக் குடியுரிமைச் சான்றிதழ், அரசு வேலைகளுக்கு முக்கிய நிபந்த னையாக இருக்க வேண்டுமென கார்கில் ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் சஜ்ஜாத் கார்கிலி கூறினார். மேலும் அவர், லடாக்கில் பொதுச் சேவை ஆணையம் இல்லை. தற்போது தில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு லட்சத்தீவு, டாமன் மற்றும் டையூ மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி  அதிகாரி களை இங்கு அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.  அரசு நிர்வாகம் வளர்ச்சி பற்றிப் பேசுகிறது,  ஆனால், வளர்ச்சி என்ன விலை என கேட்கத் தோன்றுகிறது. உள்ளூர் மக்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்போதுதான் ஜனநாய கம் நிலைநாட்டப்படும். என்றார். 

பஷ்மினா தொழில் அழிந்துவிடும்

மேலும் அவர் கூறுகையில், லே-மனாலி சாலையில் சோலார் பார்க் அமைக்க  விரும்புகின்றனர். இந்தத் திட்டத்தை லடாக்-இமாச்சல் எல்லைக்கு மாற்ற வேண்டுமென்று நாங்கள் வலியுறுத்துகிறோம். நாடோடிகளும் வனவிலங்குகளும் இந்த நிலத்தையே நம்பியுள்ளனர். சோலார் பார்க் அமைத்தால் இந்த திட்டம் பஷ்மினா தொழிலை அழித்துவிடும்.  லடாக் பீடபூமியில் சாங்தேங்கி என்ற இடத்தில் சாங்தேங்கி அல்லது பஷ்மினா ஆட்டிலிருந்து பெறப்படும் உரோமங்களைக் கொண்டு. பஷ்மினாவில் நெய்யப் படும் சால்வைகள் ‘பஷ்மினா’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சால்வைகள் மிகச் சிறந்த காஷ்மீர் இழைகளிலிருந்து கையால் நெய்யப்படுகின்றன.  (பஷ்மினா சால்வைகள் பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் உள்ள அரச குடும்பம் மற்றும் மேற்குடியினரால் அணியப்பட்டு வந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் பணக்கார பெண்களின் திருமணத்தில் வரதட்ச ணையாக பஷ்மினா போர்வைகள் முக்கிய சீராகக் கொடுக்கப்பட்டன. இது ஒரு கௌரவமாகபார்க்கப்பட்டு வந்துள்ளது) லடாக், கார்கிலில் இரண்டு  சோலார்  ஆலைகள் அமைக்கப் போவதாகக் கூறுகின்றனர். இந்த ஆலைகளுக்கு தண்ணீர் அதி களவு தேவைப்படும். தண்ணீர் எங்கிருந்து வரும் என்பதையும் இவர்கள் யோசிக்க வேண்டும். (லடாக் மற்றும் கார்கிலில் இரண்டு பெரிய சோலார் ஆலை கள் வரவுள்ளன.  லடாக்கை மையப்படுத்தி லேவிலிருந்து 254 கிமீ தொலைவில் உள்ள  நியோமாவில் உள்ள ஹன்லே-கல்டோவில்  ஒன்றும். கார்கிலை மையப்படுத்தி  கார்கிலிருந்து 254 கிமீ தொலைவில் உள்ள ஜன்ஸ்காரில் உள்ள சுரு வில்  ஒன்றும் அமைகிறது. இதன்  மூலம் ஆண்டுக்கு 12,750 டன் கார்பன்  வெளியேற்றத்தை குறைக்க முடியும். பனிப்பாறைகளை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும். லடாக்கில் இருந்து ஹரி யானாவுக்கு மின்சாரம் வழங்கப் படும் எனக் கூறப்படுகிறது)

முஸ்லிம்கள்- பௌத்தர்கள் கூட்டுப் போராட்டம்

முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக உள்ள கார்கில் மாவட்டம் மற் றும் பௌத்தர்கள் பெரும்பான்மை யாக உள்ள லே மாவட்டத்தை உள்ள டக்கியது லடாக், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ஐ ஒன்றிய  அரசு முடிவுக்கு கொண்டு வந்து, பிறகு ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து  வழங்க வேண்டும். அரசியலமைப் பின் ஆறாவது அட்டவணையில் லடாக்கைச் சேர்க்க வேண்டும். உள்ளூர் மக்களுக்கு வேலை, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் லே  மற்றும் கார்கிலுக்கு நாடாளு மன்றத் தொகுதி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லே மற்றும் கார்கிலில் பௌத்தர்களும் ஷியா முஸ்லிம் களும் கூட்டாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் துப்ஸ்டன் செவாங் கூறுகையில், அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டி ருப்பதால் போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

சட்டப் பாதுகாப்பு தேவை
எங்களுக்குள்ள முக்கியமான கவலை அதிகாரத்துவ அத்துமீறல் தான். லடாக்கிற்கு ஒதுக்கப்படும் நிதி  எவ்வாறு செலவிடப்படுகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்பதில்லை. எங்களைக் கலந்தாலோசிக்காமல் எப்படி தொழிற்கொள்கை கொண்டுவரப்பட்டது எனத் தெரிய வில்லை. அரசியல் சட்டப்பிரிவு 370-இன் கீழ் வழங்கப்பட்ட பாது காப்புகள் இனி கிடைக்காது. எனவே மாநிலம் என்ற கோரிக்கையே இதற்குத் தீர்வு. கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் போராட்ட ங்கள் மீண்டும் தொடங்கும் என்றார்.  இந்த நிலையில், கடந்த நவம்பர் 30-ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகம்  ராய் தலைமையில் ஒரு  உயர் அதிகாரம் கொண்ட  ஒரு குழுவை அமைத்தது. இந்தக்குழு யூனியன் பிரதேசத்திற்கு “அரசி யலமைப்பு பாதுகாப்புகளை” வழங்க வேண்டும் என்ற லடாக் மக்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.