world

துருக்கியில் கள மருத்துவமனையை அமைத்த இந்திய ராணுவம்

அங்காரா, பிப்.12- துருக்கியின் ஹடாய் பகுதியில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய ராணுவம் கள மருத்துவமனை ஒன்றை அமைத்துள்ளது. 6 மணி நேரத்திற்குள்ளாக அமைக்கப்பட்ட இந்த 60 பாரா ஃபீல்ட் மருத்துவமனை, காய மடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 24 நேரமும் செயல்பட்டு வருகிறது. மருத்துவ உதவிகளை வழங்குவதற்  காக 96 பேர் இந்திய ராணுவத்திலிருந்து  நிறுத்தப்பட்டுள்ளனர். இம்மருத்துவமனை யில் இதுவரை 800க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் 10 பேருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.