வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிரான தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா
ஐ.நா சபையில் பாகிஸ்தான் சார்பில், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்துள் ளது. முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடுகள், விரோதம், வெறுப்புணர்வு உள்ளிட்ட மத சகிப்பின்மைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும் அந்த வெறுப்புணர்விற்கு எதிராக போராட சிறப்புத் தூதரை நியமிக்க அந்த தீர்மானம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
என்னை தேர்ந்தெடுக்காவிட்டால் ஜனநாயகம் முடித்துவிடும் : டிரம்ப்
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெறாவிட்டால் அமெரிக்க ஜன நாயகம் முடிவுக்கு வந்துவிடும் என அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த தேர்தலில் தான் தோல்வியை சந்தித்த தற்கு தேர்தல் முறைகேடுகளே காரணம் என் றும் தற்போது தன்னை தேர்வு செய்யாமல் பைடனை தேர்வு செய்தால் நாடு முழுவதும் “ரத்தக்களரி” ஆகிவிடும் என்றும் கூறியுள்ளார்.
தொழிலாளர்கள் மீது வன்முறை; அர்ஜெண்டினா அரசு அராஜகம்
அர்ஜெண்டினா தொழிலாளர்கள் மீது காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளது. அந்நாட்டின் அரசு தேசிய சினிமா நிறுவனத்தை மூடி ஊழியர்களையும் பணி நீக்கம் செய்து விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய போது வன்முறை ஏவப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசின் தொடர் தொழிலாளர் விரோதப்போக்கின் காரணமாக ஒவ்வொரு நாளும் போராட்டங் கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மோசமான சாலைகளால் ஆப்கானில் சாலை விபத்து
ஆப்கானிஸ்தானில் நேர்ந்த பயங்கரமான சாலை விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 38 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக அந்நாட்டு போக்கு வரத்துத் துறை தெரிவித்துள்ளது. ஜெராஷ்க் மாவட்ட நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று பயணிகள் பேருந்து மீது மோதி சாலையின் எதிர்புறத்தில் இருந்த எரிபொருள் டேங்கர் லாரி மீது மோதி தீ பிடித்துள்ளது. மோசமான சாலைகளால் இது போன்று தொடர் விபத்துகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஃபா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் : டெட்ரோஸ்
காசாவின் தெற்கு எல்லையான ரஃபாவின் மீதான தாக்கு தலை உடனே நிறுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் டெட்ரோஸ் காப்ரேயஸ் வேணுகோல் விடுத்துள்ளார். மேலும் அப்பகுதியில் தீவிர மான தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்ட மிடுவது குறித்து நாங்கள் கவனித்து வரு கிறோம்; இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தி மனித நேயப் பேரழிவு ஏற்படாமல் தடுக்கவேண்டும்; அமைதியைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.