world

img

ஐ.எம்.எப். பரிந்துரைகளை நிராகரிப்போம் துனீசியாவில் வேலைநிறுத்தம் வெற்றி

துனீஸ், ஜூலை 11- பொது மக்களின் வாழ்க்கையையும், தொழி லாளர்களின் ஊதியத்தையும் பாதிக்கும் ஐ.எம்.எப். பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்று கோரி துனீசியாவின் பெரிய தொழிற்சங்க மான துனீசியா பொதுத் தொழிலாளர் சங்கம்  நடத்திய பொது வேலை நிறுத்தம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. பொதுப் போக்குவரத்து முழுமையாக இயங்கவில்லை. விமானங்கள் ரத்து செய்யப் பட்டன. அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஜனாதிபதியின் புதிய நட வடிக்கைகளால் ஊதியங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. சீர்திருத்தம் என்ற  பெயரில்  சுமையைத் தொழிலாளர்கள் மீது  ஏற்றுவதை எதிர்த்து 30 லட்சம் தொழிலாளர் களை வேலை நிறுத்தம் செய்யுமாறு துனீசியா பொதுத் தொழிலாளர் சங்கம் அழைப்புவிடுத் தது. 159 அரசுத்துறைகள் மற்றும் நிறுவனங் களை இந்த வேலை நிறுத்தம் முடக்கியது.  தலைநகர் துனிசில் தபால் அலுவலகங் களும், மக்கள் சேவை மையங்களும் மூடப் பட்டிருந்தன. துனீசியா பொதுத்  தொழிலாளர்  சங்க தலைமையகத்தின் முன்பாக வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் குழுமினர். ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தொலைக்காட்சியிலும், வானொலியிலும் தொடர்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது.  பொதுத் தொழிலாளர் சங்கத்தின் புள்ளி விபரப்படி, 96.22 விழுக்காடு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஜனநாயகக் கட்சி, தொழிலாளர் மற்றும் உரிமைகளுக்கான ஜனநாயக அமைப்பு, குடியரசுக்கட்சி, ஜனநாயக சீர்திருத்தக் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி  ஆகிய ஐந்து கட்சிகள் ஆதரவு அளித்துள் ளன. இந்த ஐந்து கட்சிகளும் இணைந்து தொழி லாளர்களுக்கும், அவர்களின் கோரிக்கை களுக்கும் ஆதரவாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. 400 கோடி அமெரிக்க டாலர் கடன் தருவதற்கு ஐ.எம்.எப். பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இவற்றை ஏற்க வேண்டாம் என்று இக்கட்சிகளும் வலி யுறுத்தியுள்ளன. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் தங்களின் ஊதியத்தை மாற்றி அமைக்குமாறு பொதுத் தொழிலாளர் சங்கம் கோரியுள்ளது. வேலைவாய்ப்பின்மை 18 விழுக்காடு மற்றும் உக்ரைன் பிரச்சனையால் உயர்ந்துள்ள எரி பொருள் விலை உள்ளிட்டவை கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன. பொதுத்துறை ஊழியர் ஊதியம் முடக்குதல், பொதுத்துறை நிறுவனங்கள் மறு சீரமைப்பு மற்றும் பல மானியங்கள் வெட்டு உள்ளிட்ட முடிவுகளை அரசு அறிவித்துள்ளது. இவையனைத்தும் ஐ.எம்.எப்.பை திருப்திப்படுத்தவே என்று தொழிலாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.