ஐரோப்பாவிற்கு செல்லும் கேபிள்களை வெட்டிய ஹவுதி
ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இணைய இணைப்புகள் வழங்க கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள நான்கு கேபிள்களை ஏமனின் ஹவுதி அமைப்பு வெட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான இணைய தகவல்தொடர்பு சேவையில் கடுமையான இடையூறுகளுக்கு வழிவகுத்துள்ளது. இதனைச் சரி செய்ய குறைந்தது எட்டு வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
ஆப்கனில் போதைப்பொருள் ஆய்வுக்கூடங்கள் அழிப்பு
தெற்கு ஆப்கானிஸ்தானில் பிரம்ஷா மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலர்கள் ரகசியமாகச் செயல்பட்டு வந்த ஐந்து போதைப்பொருள் ஆய்வுக் கூடங்களை கண்டுபிடித்து அழித்துள்ளனர். இந்த நடவடிக்கையில் ஒரு டன்னுக்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் ஆறு கடத்தல்காரர்களை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்த வழக்கு விசாரணை முடிந்தது
சர்வதேச நீதிமன்றத்தில் பாலஸ்தீனத் ்தின் நிலங்களை இஸ்ரேல் ஆக்கிர மித்துள்ள வழக்கின் பொது விசாரணை முடித் துள்ளது. வழக்கு குறித்தான தீர்ப்பு அடுத்தாண்டு அல்லது இந்த ஆண்டின் இறுதியில் வழங்கப்பட லாம் என கூறப்பட்டுள்ளது.விசாரணையில் பங் கேற்காமலேயே அதை நிராகரித்து இஸ்ரேல் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நாவில் உறுப்பினராக உள்ள 49 நாடுகள் எழுத்துப் பூர்வமாக இன்றி தங்கள் கருத்துக்களை விவாதத்தில் முன் வைத்துள்ளன.
அரபி எழுத்துக்கள் அச்சிட்ட ஆடை : பெண்ணை துன்புறுத்திய கும்பல்
பாகிஸ்தான் லாகூரில் பெண் ஒருவர் அரபி எழுத்துக்கள் அச்சிடப்பட்ட ஆடைகளை அணிந்ததற்காக சுற்றி வளைக் கப்பட்டு மிரட்டப்பட்டுள்ளார். உணவு விடுதி ஒன்றிற்கு அரபி எழுத்துக்கள் பொறிக்கப் பட்ட ஆடையுடன் சென்ற போது 300க்கும் மேற் பட்டோர் அப்பெண்ணை சூழ்ந்து ஆடையை கழற்றும் படி மிரட்டி துன்புறுத்தியுள்ளனர். அப் போது அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் கும்பலை எச்சரித்து அவர்களைக் கட்டுப்படுத்தி சாதுரிய மாக அப்பெண்ணை மீட்டுள்ளார்.
சீனாவிற்கு ஆதரவாக மலேசிய பிரதமர் கருத்து
சீனாவின் வளர்ச்சி உலகத்துக்கு வாய்ப்பு களை வழங்கும். எந்த நாட்டுக்கும் அச்சு றுத்தலாக அமையாது என மலேசிய அமைச்சர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.மேலும் மேற்கு நாடுகளுக்கு சைனோபோபியா (Sino phobia) உள்ளது என்றும் அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். வளரும் நாடுகள் சுயமாக நின்று வளர்ச்சியை நாடி வருகின்ற விருப் பத்தை இது வெளிப்படுத்தியுள்ளது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் கூறியுள்ளார்.