வாஷிங்டன், ஏப்.22- அமெரிக்காவில் வீடில்லாமல் நெருக்கடியில் தவிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று செய்தி கள் வெளியாகியுள்ளன. வீடில்லாமல் தவிக்கும் மக்க ளுக்கான தங்குமிடங்கள் அனைத் தும் அமெரிக்காவில் நிரம்பி வழி கின்றன. லட்சக்கணக்கான மக்கள், அன்றைய இரவை எங்கு கழிக்கப் போகிறோம் என்று தெரியாமல் தெருக்களில் அலைந்து கொண்டி ருக்கிறார்கள். மேலும் பல லட்சம் பேர், தங்கள் வீடுகளில் இருந்து அல்லது இருப்பிடங்களில் இருந்து எப்போது காலி செய்யச் சொல்லப் போகிறார்களோ என்ற அச்சத்தில் வாழ்கிறார்கள். பல லட்சம் பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். எதிர்பார்த்ததைப் போலவே, வீட்டு நெருக்கடி ஏழைகளைக் கடு மையாகப் பாதித்துள்ளது. கறுப்பர் கள், வெளிநாடுகளில் இருந்து வேலைதேடிக் குடியேறியவர்கள்,
மூத்த குடிமக்கள் மற்றும் இளம் பரு வத்தினர் இந்த நெருக்கடியில் சிக்கியிருக்கிறார்கள். மானிய வாட கையில் குடியிருப்பவர்கள் மற்றும் அரசு தந்துள்ள வீடுகளில் உள்ள வர்கள் கூட பாதுகாப்பாக உணர வில்லை. வாடகைக்கு குடியிருப்ப வர்கள் மட்டுமல்ல, வீட்டை வாட கைக்கு விட்டிருப்பவரும் தனது கடனைத் திரும்பக் கட்ட முடியா மல் தடுமாறுகிறார். 2007 முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் நடந்த பெரும் நிதி யிழப்பு விவகாரத்தில் சுமார் ஒரு கோடிப்பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். ஆப்பிரிக்க-அமெரிக் கர்களின் மொத்த செல்வ மதிப்பு பாதி யாகக் குறைந்தது. இது வெறும் வீட்டுப் பிரச்சனையாகப் பார்க்க முடி யாது என்று அமெரிக்கக் கம்யூ னிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள அக்கட்சி, “முதலாளித்துவ வீட்டு வசதி அமைப் பில்தான் குறையிருக்கிறது. குடி யிருக்க இடம் என்பதை அத்தியா வசியத் தேவையாகப் பார்க்காமல் அதை ஒரு பண்டமாக மாற்றி விட்டார்கள்.
நிலப்பிரபுக்கள், காலி மனை வியாபாரிகள், தனியார் பங்கு நிறுவனங்கள் மற்றும் பெரிய வங்கிகள் ஆகியோரின் லாபத்தை மட்டுமே இந்த அமைப்பு கவ னத்தில் எடுத்துக் கொள்கிறது. இந்த லாபம் அனைத்தும் ஏழைகள் மற்றும் உழைக்கும் வர்க்கக் குடும்பங்க ளைப் பலி கொடுத்தே ஈட்டப்படு கிறது. நெருக்கடி அதிகரிக்க, அதி கரிக்க, பகாசுர நிறுவனங்களான அமேசான் போன்றவை அடுக்கு மாடிக் குடியிருப்புகள் அனைத்துமே விலைக்கு வாங்கி வாடகையை சகட்டுமேனிக்கு ஏற்றிவிடும். இதனால் நெருக்கடி வாடகைக்குக் குடியிருப்பவர்கள் மீது விழுகிறது” என்று கூறியிருக்கிறது.
மக்கள் எதிர்போராட்டம்
இந்த அவல நிலையை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் எதிர் போராட்டத்தை நடத்துகிறார்கள். வாடகைக்குக் கட்டுப்பாடு விதிக்கு மாறு குடியிருப்போரும், சிறிய வீட்டு சொந்தக்காரர்களும் அரசியல் பிரதி நிதிகளைக் கோரி வருகின்றனர். புதிய வாடகைச் சட்டங்களை இயற் றுமாறு வலியுறுத்துகிறார்கள். மக்க ளால் வாங்கக்கூடிய அளவிலான விலையை வீடுகளை வழங்க வேண்டும் என்றும், கடன் தந்து விட்டு மக்களை நெருக்கடியில் தள்ள முயலும் வங்கிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களை வழங்கி, மக்களுக்குத் தீர்வு தரலாம் என்பதைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்று அமெ ரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை வலியுறுத்தியுள்ளது. அரசின் காதுகளில் கோரிக்கை களை ஒலிக்கும் வகையில் போராட் டங்களை நடத்தி வருவதற்காக பல்வேறு பிரிவு மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள கம்யூ னிஸ்ட் கட்சி, அரசு தனது செலவில் லட்சக்கணக்கான வீடுகளைக் கட்டி, மக்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கையில் எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.