உலகப் பொருளாதார நெருக்கடி: விவாதிக்க கூடும் ஜி-20 நாடுகள்
உக்ரைன் மற்றும் காசாவில் நடந்து வரும் போர்களால் உலகப் பொரு ளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வரு கிறது. இந்தச் சூழலில் பொருளாதார நெருக்க டியை தவிர்ப்பது குறித்து விவாதிக்க ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் பங்குபெறும் கூட்டம் பிரேசிலில் நடைபெறுகிறது. உக் ரைன்-ரஷ்ய போரில் ரஷ்யா முன்னேறிவரும் நிலையில் அதனை தடுக்க மேற்கு நாடுகளின் ஆதரவை அதிகரிப்பது பற்றி விவாதிக்க ஜி-7 நாடுகள் சந்திப்பும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொலிவியாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு அதிகரிப்பு
பொலிவியாவில் பெரும் மழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள் ளது. இந்த இயற்கைப் பேரிடரில் 40 பேர் உயிரி ழந்துள்ளனர். 780 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந் துள்ளன. சுமார் 410 வீடுகள் பலத்த சேதமடைந் துள்ளன என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் ஜுவான் கார்லோஸ் தெரி வித்துள்ளார். அந்நாட்டில் மழைக்காலம் நவம் பர் முதல் மார்ச் வரை நீடிக்கும் என்பதாலும் கால நிலை மாற்றத்தாலும் சேதங்கள் மேலும் அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
‘உக்ரைனுக்கு ஆதரவாக வீரர்களை அனுப்ப மாட்டோம்’
உக்ரைனுக்கு ஆதரவாக போரிட நேட்டோ வீரர்களை அனுப்ப மாட்டோம் என ஜெர்மனி அதிபர் ஸ்கோல்ஸ் கூறியுள்ளார். நேட்டோ வீரர்கள் மட்டுமின்றி எந்த ஒரு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வீரர்கள் செல்ல மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். உக் ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் போருக்கு வந்தால் அது நேரடியாக ரஷ்யா-நேட்டோ போராக மாறும். மேலும் அது அணு ஆயுதப் போராக மாறும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செங்கடல் பதற்றத்தை தணிக்க ஈரானிடம் எகிப்து வலியுறுத்தல்
செங்கடல் பதற்றத்தை தணிக்க எகிப்திடம் ஈரான் வலியுறுத்தியுள் ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் 55 ஆவது கூட் டத்தொடரின் போது எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் சமே ஷோக்ரி, ஈரான் வெளியுற வுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப் துல்லாஹியனை சந்தித்து இதனை தெரிவித் துள்ளார்.செங்கடல் பதற்றத்தால் சூயஸ் கால்வாய் வருவாய் குறைந்து எகிப்து பொரு ளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
‘சிரியாவில் மனிதாபிமான உதவிகள் அதிகம் தேவை’
சிரியாவில் சுமார் 1.67 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவை என ஐ.நா மனிதாபிமான மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு அவையில் சிரியா குறித்த சிறப்பு கூட்டத்தில் இதை அவர் தெரிவித்துள்ளார். சிரியாவின் உள்நாட்டுப் போர், கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என்றார்.