world

img

துருக்கி ஜனாதிபதித் தேர்தல் களத்தில் நான்கு பேர்

அங்காரா, மார்ச் 30- துருக்கி(துர்க்கியே) நாட்டின் புதிய  ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் நான்கு வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. துருக்கியில் புதிய ஜனாதிபதி மற்றும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் நாடாளு மன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள இரண்டு கட்சிகளின் சார்பில் வேட்பாளர் களும், பிரதிநிதித்துவம் அல்லாத வேட்பா ளர்கள் இருவரும் போட்டியிட உள்ளனர். தற்போதைய ஜனாதிபதி ரெசெப் தய்யிப் எர்டோசன் ஆளும் மக்கள் கூட்டணி சார்பில் களத்தில் இருக்கிறார். பிரதிநிதித்துவம் அல்லாத கட்சி களின் வேட்பாளர்கள்  ஒரு லட்சம் கையொ ப்பங்களை வாக்காளர்களிடம் இருந்து பெற வேண்டும். இதற்கான முயற்சியில் பலரும் ஈடுபட்டனர். நிறைவாக, முகரம் இன்ஸ் 1 லட்சத்து 14 ஆயிரத்து 657 கை யொப்பங்களும், சினன் ஓகன் 1 லட்சத்து 11 ஆயிரத்து 502 கையொப்பங்களும் பெற்று போட்டியிடத் தகுதி பெற்றிருக் கிறார்கள். இவர்களோடு பிரதிநிதித்துவம் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் எதிர்க் கட்சிகளின் கூட்டணி சார்பாக கேமல் கிளிக்டாரோக்லுயும் போட்டியிடுகிறார்.

 மார்ச் 30 அன்று அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியாகி, தேர்தல் பிரச்சாரமும் தொடங்கிவிட்டது. தற்போதைய ஜனாதி பதி எர்டோகனுக்கும், எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரான கேமல் கிளிக்டா ரோக்லுக்கும் இடையில்தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எர்டோகன் நிர்வாகத்தின் மீதான அதிருப்தியை எதிர்க்கட்சிக் கூட்டணி பயன்படுத்திக் கொள்ளும் என்றும், சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பை எர்டோகன் உயர்த்தியுள்ளார் என்று ஆளும் கூட்டணி பிரச்சாரம் செய்யும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் கிளிக்டாரோக்லுக்கு துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது. அதே வேளையில், பிற இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய கட்சிப் பெயரிலேயே போட்டியிடும் என்றும் அறிவித்திருக்கிறது.