world

img

உலகப் பொருளாதாரத்தை உயர்த்துகிறது

பெய்ஜிங், ஏப். 22- சீனாவில் இருந்து ஐரோப்பிய நாடு களுக்கு புகைவண்டிகள் மூலமான சரக்குப் போக்குவரத்து உலகப் பொரு ளாதார முன்னேற்றத்திற்கு பெரும் பங்கு செலுத்துவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகப் பொருளாதாரம் கடும் பாதிப்பைக் கண்டது. பெரும்பா லான நாடுகள் இன்னும் அந்தப்  பாதிப்புகளில் இருந்து மீளவில்லை. இதில் ரஷ்ய-உக்ரைன் மோதல் மேலும் பாதிப்புகளை உருவாக்கி விட்டது. இத்தகைய நெருக்கடிகள் மேலும் அதிகரிக்காமல் இருக்கவும்,  அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறவும் சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள் உதவுகிறது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் பிருந்தே சீனா பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் செய்து வருகிறது. அந்த வர்த்தகம் செய்யப் பயன்படுத்தப்பட்ட பாதைகளுக்கு பட்டுச் சாலை என்று  பெயரிட்டிருந்தனர். அந்தப் பட்டுச்சா லையை தற்போது மேம்படுத்தி வருகிறது.

அதே நேரத்தில் தன்னுடன் நில ரீதியான எல்லைகளைக் கொண்ட நாடுகளுக்கு ரயில் பாதைகளை அமைத்து சரக்குப் போக்குவரத்தை சீனா செய்யத் துவங்கியது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. ஐரோப்பாவில் உள்ள முக்கிய மான நகரங்களுக்கு ரயில் பாதைகள் வழியாக சரக்குப் போக்குவரத்து நடந்து வருகிறது. சீனாவின் யிவு நக ரத்தில் இருந்து லண்டன் செல்லும் ரயில்  பாதை 12 ஆயிரம் கி.மீ. தொலைவுக்குப் போடப்பட்டுள்ளது. இது யிவுவில் இருந்து ஸ்பெயினின் மாட்ரிட் நக ருக்குச் செல்லும் பாதையை விட சற்று  தொலைவு குறைவானதாகும். இந்தப் பாதைகள் வழியாக மேலும் பல்வேறு நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நகரங்களுக்கு சீனாவில் இருந்து செல்லும் ரயில்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. ஒவ் வொரு நாளும் சராசரியாக 40 ரயில்கள் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சீனாவில் இருந்து ஐரோப்பிய நாடு களுக்குச் செல்கிறது. 2020 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 22 விழுக்காடு அதிகரித்தி ருக்கிறது. பெருந்தொற்று, ரஷ்ய-உக் ரைன் மோதல் ஆகியவற்றின் பாதிப்பு களில் இருந்து உலகப் பொருளாதாரம் மீள்வதற்கு சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் உதவுகின்றன என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.