கண்ணூர், ஏப். 10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் சீத்தா ராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டார்.அவருடன் 17 அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 84 பேர் கொண்ட புதிய மத்தியக்குழு தேர்வு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில் ஏப்ரல் 6 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு நாளான ஏப்ரல் 10 ஞாயிறன்று கட்சியின் புதிய மத்தியக்குழுவை மாநாடு ஒருமனதாக தேர்வு செய்தது. மொத்தம் 84 பேரில் ஒரு இடம் காலி யாக விடப்பட்டுள்ளது. புதிய மத்தியக் குழுவில் 15 பேர் பெண்கள். 17 பேர் புதி யவர்கள் ஆவர். கட்சியின் மத்தியக்குழுவின் அதிக பட்ச வயதுவரம்பு 75 ஆக ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப் படையில் வயது முதிர்ந்த தலைவர்கள் மத்தியக்குழுவிலிருந்து விடுவிக்கப் பட்டனர்.கேரள முதல்வராக பொறுப்பு வகிக்கும் பினராயி விஜயனுக்கு மட்டும், மத்தியக்குழுவில் தொடர்வதற்கு மாநாடு விலக்கு அளித்தது. புதிய அரசியல் தலைமைக்குழு மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய மத்தியக்குழு கூடி பொதுச்செய லாளராக சீத்தாராம் யெச்சூரியை மீண்டும் தேர்வு செய்தது.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களாக
1.சீத்தாராம் யெச்சூரி
2.பிரகாஷ் காரத்
3.மாணிக் சர்க்கார்
4.பினராயி விஜயன்
5.பி.வி.ராகவலு
6. பிருந்தா காரத்
7.கோடியேறி பாலகிருஷ்ணன்
8.எம்.ஏ.பேபி
9.டாக்டர் சூர்ய காந்த மிஸ்ரா
10.முகமது சலீம்
11.சுபாஷினி அலி
12.ஜி.ராமகிருஷ்ணன்
13.தபன்சென்
14.நிலோத்பல் பாசு
15.ராமச்சந்திர தோம்
16.அசோக் தாவ்லே
17.ஏ.விஜயராகவன்
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சிறப்பு அழைப்பாளர்கள்
மத்தியக்குழுவின் சிறப்பு அழைப்பா ளர்களாக மூன்று மூத்த தலைவர்களை மாநாடு தேர்வு செய்தது. 1. எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, 2. பிமன்பாசு, 3. ஹன்னன் முல்லா
நிரந்தர அழைப்பாளர்கள்
ராஜேந்திர சிங் நேஹி, சஞ்சய் பராட்டே ஆகியோர் மத்தியக்குழுவின் நிரந்தர அழைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
மத்திய கட்டுப்பாட்டுக்குழுவின் தலைவராக ஏ.கே.பத்மநாபன்
புதிய மத்திய கட்டுப்பாட்டுக் குழுவின் உறுப்பினர்களாக ஏ.கே.பத்ம நாபன், எம்.விஜயகுமார், எஸ்.ஸ்ரீதர், மாலினி பட்டாச்சார்யா, எஸ்.வீரய்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய கட்டுப்பாட்டுக்குழு கூடி, அதன் தலைவராக ஏ.கே.பத்மநாபனை தேர்வு செய்தது. கட்டுப்பாட்டுக்குழு தலைவர், மத்தியக்குழுவின் அலுவல் சாரா உறுப்பினராகவும் இருப்பார்.
சிபிஎம் மத்தியக்குழுவில் தமிழகத் தலைவர்கள்
கண்ணூர் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய மத்தியக்குழு வில் தமிழகத் தலைவர்களான ஜி.ராம கிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மத்திய தொழிற்சங்க அரங்கத்தின் சார்பில் மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள ஆர்.கருமலையான் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.