world

துளிகள் தொடர்ச்சி ...

 தோழர் நல்லசிவன் குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வளர்ச்சி நிதியாக ரூ.60 ஆயிரம் வழங்கினர். Hஇளம் கம்யூனிஸ்ட்கள்: நிகழ்வில் 31 வய திற்குட்பட்ட வாலிபர்கள், மாதர்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்கள் இணைந்துள்ளனர். அதிகபட்சமாகப் பாப்பாகுடி-23, மானூர்-10, நாங்குநேரி-10, மின்ன ரங்கம்-10, திருநெல்வேலி-2 என 55 பேர் சேர்ந்துள் ளனர். இவர்களைப் பலத்த கரவொலிக்கிடையே ஆர்.எஸ்.செண்பகம் அறிமுகப்படுத்தினார். அவர்களைப் பாராட்டி தோழர் ஏ.நல்லசிவன்100 கனவுகள் ஒரு நாள் கைகூடும் நூல் பரிசளிக்கப்பட்டன.

ரத்ததானம்

அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் (அடைப்புக் குறிக்குள் உள்ள அவர்கள் செய்த ரத்ததானத்தின் எண்ணிக்கையாகும்) ஜெகதீஷ் (34), செல்வஸ்ரீநாத் (20), முருகன் (20), அஜிதா (17), மரியசெல்வம் (14), இவர்கள் தவிர அஜய் ஆண்டனி, ராஜேந்திரன், லெட்சுமணப் பெருமாள், நெல்சன், பேச்சிகல்யாண ராமன். இவர்கள் குறைந்தது பத்து முறை ரத்ததானம் செய்தவர்கள். இவர்களுக்குக் கேடயங்கள் பரிசளிக்கப்பட்டன.

 பகத்சிங் கலைக்குழு, பாப்பாகுடி கலைக்குழு, இலந்தைக்குளம் கலைக்குழுவினரின் சிலம்பாட்டம் நடைபெற்றது. மறைந்த பாடகர் திருவுடையானின் சகோதரர் தண்டபாணி பாடல்கள் பாடினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 213 தீக்கதிர் சந்தாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.அதற்கான தொகை 1 லட்சத்து 43 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

தொகுப்பு : ச.நல்லேந்திரன், படங்கள்: ஜெ.பொன்மாறன்