உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்ற பின்பு நன்றாக விளையாடிய வீரர் - வீராங்கனைகளை வைத்து “கனவு அணி” என்ற பெயரில் 12 பேர்கொண்ட அணியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அறிவிப்பது வழக்கம். சமீபத்தில் நிறைவு பெற்ற மகளிர்உலகக்கோப்பை தொடரில் (நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற) ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய நிலையில், இந்த தொடருக்கான கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் லீக் சுற்றில் வெளியேறிய இந்திய அணியிலிருந்து யாரும் இடம்பெற வில்லை. வீராங்கனைகள் விபரம்: மெக் லானிங்(கேப்டன்) (ஆஸ்திரேலியா), லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா), அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா), ரேச்சல் ஹெய்ன்ஸ் (ஆஸ்திரேலியா), நாட் ஸ்கிவர் (இங்கிலாந்து), பெத் மூனி(ஆஸ்திரேலியா), ஹேலி மேத்யூஸ் (மே.இ.தீவுகள்), மரிசான் கேப் (தென் ஆப்பிரிக்கா), சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), ஷப்னிம் இஸ்மாயில் (தென் ஆப்பிரிக்கா), சல்மா காதுன் (வங்கதேசம்), சார்லி டீன் (இங்கிலாந்து)