ஏகாதிபத்தியத்துக்கு எதிராக கூட்டுப்படை
நைஜர், புர்கினா பாசோ, மாலி ஆகிய நாடுகள் கூட்டுப் படையை உரு வாக்குவதாக அறிவித்துள்ளன. பிரான்ஸ் ஏகாதி பத்திய ஆட்சியை தூக்கி எறிந்து ராணுவ ஆட்சி அமைத்துள்ள இந்நாடுகள் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளால் ஆபத்து வரும் என்பதால் இப்படையை உருவாக்கியுள்ள தாக அறிவித்துள்ளன.நைஜர் ஆயுதப்படை தலைவர் மௌசா சளவு இதனை உறுதிப் படுத்தியுள்ளார். சஹேல் ஒத்துழைப்பு அடிப்ப டையில் இப்படை உருவாகிறது.
10 ஆண்டுகளில் இல்லா அளவு புலம்பெயர்ந்தோர் பலி அதிகரிப்பு
கடந்த ஆண்டு உலகளவில் 8,565 புலம்பெயர்ந்தோர் மரணமடைந் துள்ளனர் என ஐ.நா புலம்பெயர்ந்தோர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. உள்நாடு மற்றும் நாடுகளுக்கு இடையே யான போர், வறுமை, பஞ்சம் உள்ளிட்ட கார ணங்களால் அகதிகளாக புலம் பெயரும் போது கடலில் மூழ்கியும், பாலைவனத்திலும் மக்கள் மரணமடைகின்றனர். இந்த எண் ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அள வில் 2023 ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.
உணவின்றி கொடூரமாக சாகும் பாலஸ்தீனக் குழந்தைகள்
காசாவில் குழந்தைகள் உண வின்றி மிக கொடூரமான முறை யில் மரணமடைவதாக அங்குள்ள மருத்துவர் கள் காணொலி வெளியிட்டுள்ளனர். காசாவில் 6-1 குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக் கப்பட்டுள்ளது என்று ஐ.நா தெரிவித்துள்ளது. இது வரை 15 குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி கொடூரமான முறையில் மரணமடைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் 300-400 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் பிரிக்ஸ் மாநாடு
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2024 ஆம் ஆண்டு உச்சி மாநாடு அக்டோபர் 22 முதல் 24 வரை ரஷ்யாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 நாடுகளை இணைத்து விரிவாக்கம் செய்த பிறகு புதிய உறுப்பினர்களோடு நடைபெறும் முதல் உச்சி மாநாடாகும். தற்போது வெனிசுலா உட்பட 20 க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிக்ஸ் உறுப்பினராக விண்ணப்பித்துள்ளன.
ஹவுதி தாக்குதலில் மூன்று பேர் மரணம்
ஏடன் வளைகுடாவில் வணிகக் கப்ப லின் மீது ஏமனின் ஹவுதி குழு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூவர் மரணமடைந் துள்ளனர்.சில தினங்களுக்கு முன்பு ஹவுதி நடத்திய தாக்குதலில் முதல் முறையாக இங்கி லாந்து நாட்டு கப்பல் கடலில் மூழ்கியது.அப்போது இனப்படுகொலைக்கு ஆதரவாக உள்ள நாடுகளின் கப்பல்கள் மீதான தாக்கு தல் தொடரும் எனவும் சீன, ரஷ்யக் கப்பல்க ளை தாக்க மாட்டோம் எனவும் அறிவித்தி ருந்தனர்.