world

img

உலக அமைதியைக் கொண்டு வரும் சக்தி சீனா : வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேட்டி

பெய்ஜிங், மார்ச் 7- உலக அமைதியைக் கொண்டு வரும் நாடாக சீனா செயல்படும் என சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.  ரஷ்யா-உக்ரைன் போர் இஸ்ரேல் -பாலஸ்தீனப் போர் என சர்வதேசச் சூழலில் மோசமான அரசியல் கொந்தளிப்பு, அமைதி யின்மை நிலவி வரும் சூழலில் அமை திக்கான சக்தியாகவும், சர்வதேச உறவுகளை நிலையாகவும் உறுதியாகவும் கொண்டு செல்லும்  சக்தியாகவும், உலக முன்னேற் றத்திற்கான சக்தியாகவும் சீனா நிலைத்து நிற்கும் என்று அரசியல் முக்கியத்துவமான தங்களது நிலைபாட்டை வாங் யீ அறிவித்துள் ளார். சீன தலைநகர் பெய்ஜிங்கில்  சீனாவின்  வருடாந்திர அரசியல் கூட்டத்தின் போது நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த கருத்துக் களை அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கூட்டணி யின் போர் பொருளாதாரத்திற்கு மாறாக அமை தியான  பொருளாதாரத்தை முன்வைத்து, உலகின் வளர்ந்த பொருளாதார நாடாக சீனா  வளர்ந்துள்ளது. மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியக் கூட்டணியின் ஜி-7 கூட்டமைப் பிற்கு மாற்றாக பிரிக்ஸ் கூட்டமைப்பை சீனா வும்  ரஷ்யாவும்  வலுப்படுத்தி வருவதோடு பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மூலம் சர்வதேச அமைப்புகளில் வளரும் நாடுகளுக்கு ஏற்ற வகையில் சீர்திருத்தத்தை முன் மொழிந்து வருகிறது. 

அமெரிக்காவின் சூழ்ச்சி

இந்நிலையில் ரஷ்யா மற்றும் சீனாவை ராணுவம் மூலம் சுற்றி வளைத்து வீழ்த்த அமெ ரிக்கா பல ஆண்டு காலமாக அரசியல் சூழ்ச்சிக ளை செய்து வருகிறது. ஒருபுறம் நேட்டோ மூலம் ரஷ்யாவையும் மறுபுறம் தைவான், பிலிப்பைன்ஸ் நாடுகளை பயன்படுத்தி தென்  சீனக் கடலில் பதற்றத்தை உருவாக்கி சீனா விற்கும் அழுத்தம் கொடுத்து வருகிறது.  சமீபத்தில் தென் சீனக் கடலில் பிலிப்பை ன்ஸ் நாட்டு  கப்பல் அத்துமீறி நுழைந்ததால்   பதற்றம் உருவானது. அதனை தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாட்டு  தலைவர்கள் சீனாவுடன் முரண்படும் வகையில் கருத்துக் களை தெரிவித்திருந்த நிலையில் வாங் யீ யின்  கருத்து சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.   சீன அரசின் பிரதிநிதிகள் சர்வதேச அமைப்பு களின் மாநாடுகள், கூட்டங்களின் போது தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.