world

img

ஒற்றுமையை வலியுறுத்தும் வேட்பாளர்கள் வெற்றி

ஹாங்காங், டிச.21- ஹாங்காங் சட்டமன்றத் தேர்தலில் சீனாவுடனான ஒற்றுமையை வலியுறுத் தும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றி ருக்கிறார்கள். பிரிட்டனின் ஆக்கிரமிப்பிலிருந்து விடு தலை பெற்று சீனாவுடன் இணைந்துள்ள ஹாங்காங்கில் சிறப்பு நிர்வாகம் உள்ளது. இந்த சிறப்பு நிர்வாகப்பகுதிக்கான சட் டங்களை உருவாக்க சட்டமன்றம் அமைக் கப்பட்டிருக்கிறது. இதில் 90 இடங்கள் உள்ளன. இந்த 90 இடங்களுக்கான தேர்த லில் 153 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  தேர்தலுக்கு எதிராக மேற்கத்திய நாடு களின் உதவியுடன் பெரும் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பிரச்சாரத்தின் நோக்கமே, ஏதாவது வன்முறையைத் தூண்டிவிட்டு அதன் மூலம் தேர்தலை சீர்குலைப்பதாகவே இருந்தது. மக்களின் ஒரு பெரும்பகுதியினர் அச்சத்தில் ஆழ்ந்தாலும், அந்நிய சக்திகளின் சதிக்கு இரையாகவில்லை. வன்முறைப் போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்த்த சில கட்சிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாறாக, தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.

வாக்குப்பதிவு குறைவு என்று மேற்கத்திய நாடுகள் கூறினாலும், 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் வாக்குச்சாவடிகளுக்கு வந்தது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையே காட்டுகிறது. மக்கள் ஆதரவு இல்லை என்ற குற்றச்சாட்டையும் இது நிராக ரிக்கிறது என்கிறார் ஹாங்காங் அரசியல் தலைவர்களில் ஒருவரான கேர்ரி லேம்.  அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள் “ஜனநாயக விரோதம்” என்று தற்போது நடந்த தேர்தலை வர்ணித்துள்ளன. இந்தத் தேர் தல் நடைமுறை என்பது எங்கள் உள் விவகாரம், வெளிநாட்டு சக்திகள் இதில் தலையிட வேண்டும் என்று சீன வெளி யுறவுத்துறையின் ஹாங்காங் பிரிவு திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது. 57 பக்கங் கள் கொண்ட அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். ஹாங்காங்கில் உள்ள சீனத் தொடர்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ஹாங்காங்கின் தன்மைக்கேற்ற அம்சங்களோடு ஜனநாயகம் வெற்றி கரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.